கடந்த 2018- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியான படம் கே.ஜி.எஃப். இப்படம் வெளியான அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக ஓட, 'கே.ஜி.எஃப் 2' படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எகிறியது. தற்போது இந்தப் படத்தின் ஷூட்டிங்கானது முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில் கரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், வருகிற அக்டோபர் 23- ஆம் தேதி உலகம் முழுவதும் கே.ஜி.எஃப் 2 ரிலீஸாக இருப்பதாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தப் படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு இன்னும் 22 நாட்கள் மீதம் உள்ளதால், ஜூன் மாதத் தொடக்கத்தில் அரசாங்க அனுமதியின்படி படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டால், இறுதிக்கட்ட பணிகளை அசுரவேகத்தில் முடித்துவிட்டு கே.ஜி.எஃப் 2 படத்தைத் தங்கு தடையின்றி சொன்ன தேதியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.