/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/304_13.jpg)
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப். சேப்டர் 1'.இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத்தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் உருவாகியது. யஷ், சஞ்சய் தத்,ரவீனா டாண்டன்,பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படம் கடந்த 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.பெரும் எதிர்பார்ப்புக்குமத்தியில்வெளியான இப்படத்தை ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். மேலும் வசூல் ரீதியாக பல சாதனைகளையும் படைத்தது வருகிறது.
இதனிடையே 'கே.ஜி.எஃப்' இரண்டாம் பாகத்தில் மூன்றாம் பாகத்திற்கானஅப்டேட் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் அதை தற்போது படத்தின் தயாரிப்பாளர்கார்த்திக் கௌடாஉறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், "கே.ஜி.எஃப்மூன்றாம் பாகத்திற்கானமுதற்கட்ட பணிகளை தங்களது குழு தொடங்கி விட்டனர். விரைவில் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரங்கள் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
'கே.ஜி.எஃப்' இரண்டாம் பாகத்தின் ட்ரைலர்வெளியிட்டுவிழாவில் பேசிய இயக்குநர் பிரசாந்த் நீல்மூன்றாம் பாகம் வெளியாக குறைந்தது 8 வருடங்களாவது ஆகும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)