bhdrhde

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 1'. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைதொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் தயாராகிவருகிறது. இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா, பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கியகதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.

Advertisment

'கே.ஜி.எஃப் சேப்டர் 2' திரைப்படம் ஜுலை 16ஆம் தேதி வெளியாகும் என கடந்த ஜனவரி மாதத்தின் இறுதியில் அறிவித்த படக்குழு, அதற்கேற்ப இறுதிக்கட்டப் பணிகள், பட வியாபாரம் உள்ளிட்ட வேலைகளில் கவனம் செலுத்திவந்தது. கரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டதால், 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படத்தைத் திட்டமிட்டபடி திரைக்கு கொண்டுவருவதில் சிக்கல் எழுந்தது. மேலும், ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால், படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை மேற்கொள்வதிலும் பின்னடைவு ஏற்பட்டது.

grhrhdr

Advertisment

ஊரடங்கிலிருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்புநிலை திரும்பிய பிறகே படத்தின் இறுதிக்கட்டப் பணிகளைத் திட்டமிட்டபடி நிறைவு செய்யக்கூடிய சூழல் உருவானது. எனவே, 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' ரிலீஸ் எப்போது என ரசிகர்களிடையேஎதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படம் அடுத்த ஆண்டு 2022 ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.