Skip to main content

கிமீ கணக்கில் வரிசை.... பல மாநிலங்களிலிருந்து வந்த இளைஞர்கள்... கே.ஜி.எஃப் 2 ஆடிஷன்...

Published on 27/04/2019 | Edited on 27/04/2019

கடந்த ஆண்டு கன்னட நடிகர் யஷ் நடிப்பில் பெரும் பொருட்செலவில் ஐந்து மொழிகளில் வெளியான படம் கே.ஜி.எஃப்: சாப்டர் 1. இந்த படம் வெளியாகி அனைத்து மொழிகளிலும் பெரும் வரவேற்பை பெற்றது. சிலர் இந்த படத்தை விமர்சித்தாலும் பெரும்பாலானவர்கள் இதை பாகுபலிக்கு இணையாகவே ஒப்பிட்டு பேசினார்கள். நடிகர் யஷ்க்கு கன்னட சினிமாவை தாண்டியும், இப்படத்தால் நல்ல மார்கெட் உருவாகியுள்ளது. பாலிவுட்டில் சுமார் 1500 திரையில் வெளியிடப்பட்ட கே.ஜி.எஃப், ஷாருக்கின் ஜீரோ படத்துடன் மோதி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பலர் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு காத்துக்கொண்டிருக்கின்றனர். 
 

kgf

 

 

இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க ஆசைப்படுபவர்களுக்கு ஒரு ஆடிஷன் ஒன்றை ஏற்பாடு செய்தது படக்குழு. சிறிய ரோல்களுக்கான ஆடிஷனை நேற்று பெங்களூருவில் உள்ள ஜிஎம் ரிஜாய்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த ஆடிஷனில் கலந்துகொள்வதற்காக பலரும் கலந்துகொண்டனர். ஹோட்டல் வாசலில் அரை கிமீ தூரத்திற்கு கியூவ் நின்றிருந்தது.
 

கன்னடத்தை தாண்டி இந்த படத்திற்கு மற்ற மொழிகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதால் ஆடிஷனில் கலந்துகொள்ள தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்த இளைஞர்களும் கலந்துகொண்டுள்ளனர். சில மாணவர்கள் பள்ளியை கட்டடித்தும் கலந்திருக்கின்றனர். படக்குழு 8 முதல் 16 வயது வரை சிறுவர்களுக்கும், 25 வயதுக்குமேலும் நடிப்பதற்கு ஆடிஷன் நடைபெறுவதாக அறிவித்திருந்தது. நேற்று நடைபெற்ற இந்த ஆடிஷனுக்காக காலை ஆறு மணியில் இருந்து ரசிகர்கள் காத்திருந்திருக்கின்றனர். ஒரு நிமிடம் சொந்த வசனத்தை தாங்களே உருவாக்கி பேச வேண்டும் என்று படக்குழு அந்த போஸ்டரில் அறிவித்திருந்தது.
 

இரண்டாம் பாகத்தை மேலும் பெரிதாக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை வில்லனாக நடிக்க படக்குழு அணுகுகிறது என்று தகவல் வெளியாகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இதுபோன்ற சோகமான சம்பவங்கள் பயம் கொள்ள செய்கிறது” - யஷ் வருத்தம்

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
yash visited 3 fans passed away while his birthday celebration

கே.ஜி.எஃப் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்ற கன்னட நடிகர் யஷ். நேற்று அவரது பிறந்த தினத்தை, கர்நாடகாவில் அவரது ரசிகர்கள் பேனர், போஸ்டர், பட்டாசு, கேக் வெட்டுதல் உள்ளிட்ட கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அந்த வகையில் கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டத்தில் உள்ள சரங்கி கிராமத்தில், இளைஞர்கள் 8 பேர் சேர்ந்து சுமார் 25 அடி உயரத்தில் பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைக்க முற்பட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவில், அந்த கட் அவுட்டை நிற்க வைக்கும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக அந்த பேனர், மேலே இருந்த மின்சாரக் கம்பியில் உரச, அதிலிருந்து மின்சாரம், கட் அவுட் வைத்திருந்த இளைஞர்கள் மீதும் பாய்ந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே ஹனுமந்த் (21), முரளி (20), நவீன் (19) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள இளைஞர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான மூவரின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, யஷ் அந்த உயிரிழந்த ரசிகர்களின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிவிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீங்கள் முழு மனதுடன் எங்கிருந்து வாழ்த்தினாலும் அதுவே சிறந்த வாழ்த்தாக அமையும். இதுபோன்ற சோகமான சம்பவங்கள் எனது பிறந்தநாளையே கொண்டாட பயம் கொள்ள செய்கிறது. இப்படி காட்டுவது மனப்பான்மை அல்ல. தயவு செய்து உங்கள் அன்பை இப்படி காட்டாதீர்கள். பேனர்கள் வைக்காதீர்கள், பைக் சேஸ்கள் செய்யாதீர்கள், ஆபத்தான முறையில் செல்ஃபி எடுக்காதீர்கள். என்னை ரசிப்பவர்களும் என்னுடைய ரசிகர்களும், என்னைப் போலவே வாழ்க்கையில் வளர வேண்டும் என்பதே எனது நோக்கம்.

நீங்கள் என்னுடைய உண்மையான ரசிகராக இருந்தால், உங்கள் வேலையை விடாமுயற்சியுடன் செய்யுங்கள், உங்கள் வாழ்க்கையை உங்களுக்காக அர்ப்பணித்து மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் மாற்றுங்கள். உங்கள் குடும்பங்களுக்கு நீங்கள்தான் எல்லாமே. அவர்களைப் பெருமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருங்கள். எனது ரசிகர்களின் அன்பை வெளிப்படுத்தி பிரபலமடைவதில் எனக்கு விருப்பமில்லை. என் ரசிகர்கள் வருத்தப்பட்டாலும் அதை வெளியில் சொல்வதை எப்போதும் குறைத்துக் கொள்வேன். நீங்கள் என்னை மதிக்கிறீர்கள் என்றால், முதலில் பொறுப்பாக இருங்கள். இந்த ஆண்டு, கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால், எனது பிறந்தநாளைக் கொண்டாட விரும்பவில்லை. நம் முடிவில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. அதனால் தான், அதை எளிமையாக வைத்து, குடும்பத்துடன் மட்டும் கொண்டாட முடிவு செய்தேன்,'' என்றார். பின்பு உயிரிழந்த குடும்பங்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுவதாகவும் உறுதி அளித்தார். தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களையும் பார்த்து நலம் விசாரித்தார். 

Next Story

யஷ் பிறந்தநாள் கொண்டாட்டம் - பரிதாபமாக உயிரிழந்த ரசிகர்கள்

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
yash fans passed away in birthday celebration

கே.ஜி.எஃப் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்ற கன்னட நடிகர் யஷ், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி கர்நாடகாவில் அவரது ரசிகர்கள் பேனர், போஸ்டர், பட்டாசு, கேக் வெட்டுதல் உள்ளிட்ட கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டத்தில் உள்ள சரங்கி கிராமத்தில், இளைஞர்கள் 8 பேர் சேர்ந்து சுமார் 25 அடி உயரத்தில் பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைக்க முற்பட்டுள்ளனர். நேற்று நள்ளிரவில், அந்த கட் அவுட்டை நிற்க வைக்கும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக அந்த பேனர், மேலே இருந்த மின்சாரக் கம்பியில் உரச, அதிலிருந்து மின்சாரம் கட் அவுட் வைத்திருந்த இளைஞர்கள் மீதும் பாய்ந்திருக்கிறது. இதனால் சம்பவ இடத்திலேயே ஹனுமந்த (21), முரளி (20), நவீன் (19) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள இளைஞர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பலியான மூவரின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.