ADVERTISEMENT

பாலியல் புகார் கொடுத்த நடிகைக்கு மிரட்டல்!

12:26 PM May 09, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

மலையாள திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் விஜய் பாபு. இவர் மீது கோழிக்கோட்டை சேர்ந்த நடிகை ஒருவர் சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை வீடியோ எடுத்து தன்னை அடிக்கடி மிரட்டி வருவதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த புகாரில் தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் நடிகர் விஜய் பாபு துபாய்க்கு தப்பித்து சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி போலீஸ் அவருக்கு சம்மன் அனுப்பியது. வெளிநாடு சுற்றுப் பயணத்தில் இருப்பதால் தன்னால் ஆஜராக முடியாது என்றும், 19 ஆம் தேதி வரை அவகாசம் வேண்டும் எனவும் விஜய் பாபு போலீசுக்கு மெயில் அனுப்பியுள்ளார்.

இதனை ஏற்க மறுத்த போலீசார் சர்வதேச போலீஸ் உதவியுடன் விஜய் பாபுவை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் புகாரை வாபஸ் வாங்கும் படி நடிகைக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT