Skip to main content

இசையமைப்பாளராக அறிமுகமாகும் கருணாஸின் மகன்

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

ken karunas first film as music director Salliyargal

 

நடிகர் கருணாஸ் தயாரிப்பில் கிட்டு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சல்லியர்கள்'. இப்படத்தில் சத்யாதேவி, கருணாஸ், திருமுருகன், ஜானகி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. 

 

இந்நிலையில் இப்படத்தின் மூலம் கருணாஸின் மகனும் 'அசுரன்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவருடன் சேர்ந்து ஈஸ்வர் என்ற நபரும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

 

இது தொடர்பாக கென் கருணாஸ், "இந்தப் படத்திற்கு என் நண்பன் ஈஸ்வர்தான் மெயின் இசையமைப்பாளர். நான் அவனுக்குப் பக்க பலமாக பணியாற்றியுள்ளேன்" எனப் பேசினார். இப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக கருணாஸ்!

Published on 16/07/2021 | Edited on 16/07/2021

 

bdhdssdbsbs

 

'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பி.எஸ். ராம்நாத் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஆதார்'. இதில் நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'பிக்பாஸ்' புகழ் நடிகை ரித்விகா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் அருண்பாண்டியன், ‘வத்திக்குச்சி’ படப்புகழ் திலீப், 'பாகுபலி' பட புகழ் பிரபாகர், நடிகை மனிஷா யாதவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ஸ்ரீ காந்த் தேவா இசை அமைக்கிறார்.

 

சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சிகளை கவனிக்க, படத்தொகுப்பை ஜெய் மேற்கொள்கிறார். கலை இயக்குநர் பொறுப்பை ஜான் பிரிட்டோ ஏற்க, இந்தப் படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக ஏ.பி. ரவி பணியாற்றுகிறார். 'ஆதார்' படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் அழகம்மை மகன் சசிக்குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (16.07.2021) பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.

 

 

Next Story

சசிகலா சிறையிலிருந்து வரும்போது அ.தி.மு.க.வில் நிச்சயம் சலசலப்பு இருக்கும்... கருணாஸ் பேட்டி!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020
actor karunas

 

அ.தி.மு.க.வில் பல தரப்பு கருத்து பிரதிபலிக்கப்படுகிறது, மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் மசோதாவிற்கு முக்குலத்தோர் புலிப்படை எதிர்ப்பு தெரிவிக்கிறோம், முக்குலத்தோர் புலிப்படை வரும் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடும் என மதுரையில் நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் பேட்டியளித்தார்.

 

தென்மாவட்டங்களில் இரு பிரிவினரிடைய மோதல் ஏற்படும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் எம்.எல்.ஏவுமான நடிகர் கருணாஸ் தென்மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் அளித்தார்.

 

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ்: விளம்பர நோக்கத்தில் இரு தரப்பினரிடையே பிரச்சனைகளை உருவாக்கும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் மீதும், அச்சகங்கள் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். வரும் தேர்தலில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முக்குலத்தோர் புலிப்படை உதவியாக இருக்கும். வரும் தேர்தலில் கூட்டணி அமைக்கும் கட்சியிடம் 2 தொகுதிகள் கேட்கப்படும் என்றார். 

 

அ.தி.மு.க.வில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக பல தரப்பு கருத்துகள் பிரதிபலிக்கப்படுகிறது. சசிகலா சிறையிலிருந்து வெளியில் வரும்போது அ.தி.மு.க.வில் நிச்சயம் சலசலப்பு இருக்கும் எனவும், அ.தி.மு.க.வில் சசிகலா இடம்பெறுவது குறித்து கருத்துச் சொல்ல இயலாது என்றார். 

 

Ad

 

வேளாண்மையை அழிக்கும் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் மசோதாவிற்கு முக்குலத்தோர் புலிப்படை எதிர்ப்பு தெரிவிக்கிறோம் எனவும், காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை தொடங்கிவைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனவும், ரஜினியின் ஆன்மிக அரசியல் குறித்த கேள்விக்கு ரஜினி ரசிகர்கள் பிறந்ததில் இருந்து போஸ்டர் ஒட்டிவருகிறார்கள், அவர் அரசியலுக்கு வந்தால்தான் எதுவும் சொல்லமுடியும், யார் வேண்டுமானாலும் தமிழகத்தில் மட்டும் தான் அரசியல் கட்சி தொடங்கலாம் என்ற நிலையில் எந்தக் கட்சிக்கும் கொடிபிடிக்க ஒரு கூட்டம் உள்ளது என்றார்.