66வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த நடிகைக்கான விருதை மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ''மகாநதி (நடிகையர் திலகம்)'' படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் பெற்றார். இவருக்கு பல்வேறு தரப்பிலுருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில் இவர் தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்தும், தன் உடல் எடை மெலிவு குறித்தும் நேற்று அளித்த ஒரு பேட்டியில் பேசியபோது....

Advertisment

keerthy suresh

''எனக்கு தேசிய விருது கிடைத்ததற்காக பாராட்டிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. நான் 'நடிகையர் திலகம்' படம் முடித்த பின் ஒரு 5 மாதம் ஓய்வில் இருந்தேன். அந்த சமயம் என்னை பலரும் ஏன் குண்டாக இருக்கிறாய், சப்பியாக இருக்கிறாய் என்றெல்லாம் கேட்டார்கள். நானும் சரி இனிமேல் சில காலம் ஒர்கவுட் எல்லாம் செய்து பார்ப்போம் என ஆரம்பித்து 5, 6 மாதங்கள் உடற்பயிற்சி செய்தேன். அதன் பலன்தான் நான் இருக்கும் தற்போதைய தோற்றம். யார் கிளப்பிவிட்டாரகள் என தெரியவில்லை. நான் எந்த படத்திற்காகவும் என் உடலை குறைக்கவில்லை. சொல்லப்போனால் சில தமிழ் படங்களுக்காக என்னை அணுகிய சிலர், இன்னும் கூட வெய்ட் போட சொல்கிறார்கள்'' என்றார்.