Skip to main content

''அந்தச் செய்தியால் என் இதயம் வலிக்கிறது'' - கீர்த்தி சுரேஷ் வேதனை! 

Published on 08/08/2020 | Edited on 08/08/2020

 

dfn

 

'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் துபாயில் சிக்கியிருந்த இந்தியர்களைத் தாயகம் அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரவு 8.15 மணிக்கு கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, ஓடுதளத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் திடீர் விபத்துக்குள்ளானது. இந்த கோரவிபத்திற்குள்ளான விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்தது. இந்த விமானத்தில் 10 குழந்தைகள் உட்பட சுமார் 180 பயணிகளும், விமான ஊழியர்களும் பயணித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் பயணித்துள்ளனர். இதுவரை ஒரு குழந்தை உள்பட 20 பேர் உயிரிழந்திருப்பதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்...


''நிலச்சரிவு மற்றும் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய செய்தியால் என் இதயம் வலிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பிரார்த்தனை'' எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்