karthi keerthy

Advertisment

பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்ட மணிரத்னம் தற்போது அதற்குண்டான அனைத்து வேலைகளையும் முடித்து படப்பிடிப்புக்கு தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்துக்கு கார்த்தியும், குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேசும் தேர்வாகி உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், மோகன்பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதன் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் தற்போது மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக அரபிக்கடலன்டே சிம்ஹம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.