Skip to main content

"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு!" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்  

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

பிரபல நடிகரும், இயக்குனருமான ஆர்.பார்த்திபன் இயக்கத்தில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'ஒத்த செருப்பு சைஸ் 7' திரைப்பட இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர்கள் பாக்யராஜ், ஷங்கர் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள், இயக்குனர்கள் பங்கேற்றனர். அப்போது விழாவில் பேசிய பாக்யராஜ்...
 

k.bagyaraj



"இந்த விழாவைப் பொறுத்தவரை ஆர்.பார்த்திபனை விட எனக்குத்தான் இரட்டிப்பு மகிழ்ச்சி, பெருமை. அதற்கு என்ன காரணம் என்றால் பார்த்திபன் என்னுடைய சிஷ்யன். அதே போல் பார்த்திபன் எனக்கு சிஷ்யன்  மட்டுமில்லை, சில விஷயங்களில் குருவை மிஞ்சிய சிஷ்யனாகவும் இருக்கிறார். எல்லாத்தையும் விட சிறப்பானது உலக நாயகன் இந்த விழாவில் பங்கேற்றது" என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து தான் உதவி இயக்குனராக பணிபுரிந்த முதல் படமான 16 வயதினிலே மற்றும் சின்ன வீடு திரைப்படம் தொடர்பான கருத்துக்களை பகிர்ந்துகொண்ட பாக்யராஜ், "16 வயதினிலே படத்தில் ஒரு காட்சியில் சந்தைக்குப் போய்ட்டு வருவார் கமல். அப்போது அமைதியாக நடந்து வருமாறு காட்சி அமைத்திருந்தார் எங்க டைரக்டர் (பாரதிராஜா). நான் தனியா கமல்கிட்ட போயி ஒரு பாட்டு சொல்லி அதை பாடிகிட்டே நடந்து வர சொன்னேன். இது டைரக்டருக்கும் தெரியாது. ஆக்ஷன் சொல்லி, கமல் நடந்து வந்தார். "ஆத்தோரமா ஊர்கோலமா மாப்பிள்ளை பொண்ணு, அதை பாத்துப்பாத்து ஏங்குதம்மா முண்டச்சி கண்ணு" என கமல் பாடிக்கொண்டே நடந்து வருவதைப் பார்த்த டைரக்டர், என்னிடம் வந்து "டேய்... என்னடா இது" என்று கேட்டார். கமல், "இவர்தான் இப்படி பாடிக்கிட்டே வரச்சொன்னார்" என்று சொல்லிட்டார். டைரக்டரும் அது நல்லா இருந்தனால படத்துல வச்சுட்டார்" என்று கூறி அந்தப் பாடலை மேடையில் பாட, கமல்ஹாசன் உட்பட அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

  16 vayadhinile



மேலும் பேசிய அவர் தன்னிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த பார்த்திபன் தான் உறங்கும்போது கூட திரைப்படத்தில் வேறு என்ன செய்யலாம் என்பது குறித்து சிந்தித்துக் கொண்டிருப்பார் என கூறினார். அத்தகைய மிகச்சிறப்பான இயக்குனர் பார்த்திபன் எனவும் இந்தத் திரைப்படம் மிகச் சிறப்பான வெற்றியடையும் எனவும் கூறி நம்பிக்கை தெரிவித்தார். அதே போல் உதவி இயக்குனர்கள் அனைவரும் தங்களை இயக்குனர்களாகக் கருதி திரைப்படத்தில் கவனம் செலுத்தினால், அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என இளம் இயக்குனர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசினார். அப்படி எனக்குக் கிடைத்த ஒரு உதவி இயக்குனர்தான் பார்த்திபன் என கூறி விடைபெற்றார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மிக மன வருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன்'-ம.நீ.மவில் புகைச்சல்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
 'I am resigning with great regret'-M.N.M

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

அதேநேரம் அரசியல் கட்சிகளின் கூட்டணி காய் நகர்த்தலில் ஏற்படும் அதிருப்தி காரணமாக சிலர் தான் பயணித்த அரசியல் கட்சிகளிலிருந்து மற்றொரு கட்சிகளுக்கு தாவும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடும் என காத்திருந்த அக்கட்சியின் தொண்டர்கள் சிலருக்கு தேர்தலில் இருந்து மக்கள் நீதி மய்யம் விலகியது அதிருப்தியை கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தேர்தலை சந்திக்காமல் திமுக கூட்டணியில் ராஜ்யசபா சீட்டு ஒன்றை வாங்கி விட்ட நிலையில் இது கட்சிக்குள் பல்வேறு புகைச்சல்களை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலை சந்திக்காமல் விலகுவது கட்சியினுடைய வளர்ச்சிக்கு பெரிய தடையாக இருக்கும் என மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகியாக இருந்த அனுஷ்கா ரவி மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளதோடு அவர் பாஜகவிலும் இணைந்துள்ளார்.

 'I am resigning with great regret'-M.N.M

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேர்தல் அரசியலில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதினால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து மிக மன வருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

கமல்ஹாசன் எடுத்த திடீர் முடிவு

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Kamal Haasan made a sudden decision

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

திமுகவுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கி இருப்பதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று நிபந்தனையை கமல்ஹாசன் ஏற்க மறுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

முன்னதாகவே அவர் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல இருந்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், செர்பியா நாட்டிற்கு சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருந்த நிலையில் மீண்டும் தனது பயணத்தை கமல்ஹாசன் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் தக் - லைஃப் திரைப்படத்தின் படப்பிடிப்பு செர்பியா நாட்டில் நடைபெற்று வருகிறது. கமல் அல்லாத காட்சிகளை படக்குழு படமாக்கி சென்னை திரும்ப உள்ளது. இந்த நிலையில் மக்களவை தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் நாள் முடியும் வரை வெளிநாட்டு பயணத்தை கமல் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.