Advertisment

நீதிமன்றத்தில் வழக்கு... தீபாவளிக்கு பிகில் வெளியாவதில் புதிய சிக்கல்? 

தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் படம் பிகில். இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார். நயன்தாரா, யோகிபாபு, ஆனந்த் ராஜ், இந்துஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். மெர்சல், சர்கார் படங்களை தொடர்ந்து விஜய்யின் இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

Advertisment

vijay

வருகிற தீபாவளிக்கு படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்புதான் படத்தின் ட்ரைலர் வெளியாகி பல சாதனைகளை புரிந்து வருகிறது. ஒரு மில்லியன் லைக்ஸுக்கு மேல் வாங்கியுள்ளது இந்த வீடியோ. மேலும் 25 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்கள் கண்டு கழித்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் மீண்டும் இந்த படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் உதவி இயக்குனர் கே.பி.செல்வா. இவர் இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்கின்போதே தன்னுடைய கதையை திருடி பிகில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறி, படத்திற்கு தடை கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

actor vijay bigil
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe