கரோனா வைரஸ் பயம் மொத்த இந்தியாவையும் வாட்டி வதைத்து வருகின்றது. இதனால் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஷூட்டிங் எதுவும் தற்போது நடைபெறாத காரணத்தால் திரை நட்சத்திரங்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்கிறார்கள். நடிகை, நடிகர்கள் சிலர் தாங்கள் செய்யும் சுவாரசியமான விஷயங்களை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக அதனை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை காத்ரீனா கைஃப் வீட்டில் தான் செய்த வேலைகள் அனைத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், இன்று துடைப்பத்தை வைத்து வீட்டை சுத்தம் செய்த அவர், திடீரென துடைப்பத்தை வைத்து கிரிக்கெட் விளையாடுவது எப்படி என்று செய்து காட்டினார். இந்த நேரத்தில் இது தேவையா என்று அவரது ரசிகர்கள் இன்ஸ்டாவில் அவரிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.