பரியேறும் பெருமாள் வெற்றியை தொடர்ந்து கதிர் நடிக்கின்ற படம் பிகில். அட்லி விஜய்யும் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்து பணிபுரியும் இப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். நயன்தாரா ஹீரோயினாக நடிக்க அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், யோகி பாபு, 'மேயாத மான்' இந்துஜா, சவுந்தரராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
வருகின்ற தீபாவளிக்கு இப்படம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதனால் இப்படத்தின் கடைசி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இருந்து சிங்கப்பெண்ணே என்கிற பாடல் லீக் ஆனதை தொடர்ந்து படக்குழு யூ-ட்யூபில் வெளியிட்டது. தற்போது இப்பாடல் செம வைரலாகி வருகிறது.
இப்படத்தில் நடித்துள்ள கதிர், தனது ஷூட்டிங்கை முடித்துவிட்டதாக நேற்று ட்வீட் செய்துள்ளார். அதில், “என் மனது பேச விரும்புவதை இந்த புகைப்படம் பேசும். 'பிகில்' படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டேன். விஜய் அண்ணா, உங்கள் அரவணைப்பு எனக்கு மகிழ்ச்சி உணர்வையும், முடிவற்ற அன்பையும் எனக்கு அளித்தது. சிறப்பான தருணங்களுக்கு நன்றி. இதனை உண்மையாக்கிய அட்லி அண்ணாக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.