Advertisment

'50 லட்சம் ரூபாயை இதற்காக செலவு செய்திருக்கிறோம்' - கஸ்தூரி ராஜா வெளியிட்ட தகவல்

kasthuri raja

Advertisment

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி, திருவிளையாடல் ஆரம்பம், 3 ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் கஸ்தூரி ராஜா தற்போது தயாரித்து இயக்கும் படம் 'பாண்டிமுனி'. அகோரி வேடத்தில் ஜாக்கி ஷெராப், நாயகிகளாக மேகாலி ,ஜோதி, வைஷ்ணவி மற்றும் ஷாயாஜி ஷிண்டே, சிவசங்கர்,சுமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பாண்டிமுனி' படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் தொடர்ந்து திருவண்ணாமலை அருகே உள்ள வேட்டவலம் என்ற ஊரில் நடை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் கஸ்தூரி ராஜாவிடம் படம் பற்றியும் படப்பிடிப்பு பற்றியும் கேட்டோம்...

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

"திருவண்ணாமலை அருகே வேட்டவலம் ஜமீனுக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது. ஐந்து ஏக்கர் பரப்பில் பாறைகள் நிறைந்த இடத்துக்கு நடுவே அந்த குளம் இருக்கிறது. அந்த குளத்தில் சுமார் 4000 சதுர அடி அளவுக்கு இரும்பு தூண்கள் இரும்பு பலகைகளைக் கொண்ட அரங்கு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் மீது அமர்ந்து அகோரி வேடத்தில் ஜாக்கி ஷெராப் மற்றும் 400 அகோரிகள் பூஜை செய்வது போன்ற காட்சிகள் மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கினோம். அத்துடன் 25 அடி உயரமுள்ள சிவன் சிலை ருத்திரதாண்டவ கோலத்தில் உருவாக்கப்பட்டு படமாக்கப்பட்டது. இரண்டு மலைகளுக்கு இடையே தொங்கு பாலம் அமைக்கப் பட்டது. அதில் அகோரிகள் வலம் வருவது மாதிரியான காட்சிகளும் படமாக்கப்பட்டது. கைலாயத்தை பிரதி எடுத்தது மாதிரியான இந்த அரங்குகள் திரையில் பிரமிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். சுமார் 50 லட்சம் ரூபாயை இதற்காக செலவு செய்திருக்கிறோம். என் சினிமா பயணத்தில் பாண்டிமுனி படம் வித்தியாசமான அனுபவத்தை எனக்கு தந்திருக்கிறது" எனறார் கஸ்தூரிராஜா.

kasthuriraja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe