Advertisment

'இதோ வரேன்னு போனவர் அரைமணி நேரம் கழித்து வந்தார்... ஆடிப் போய்டேன்' - கஸ்தூரி ராஜா வியப்பு !

kasthuri raja

Advertisment

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கும் 'பாண்டி முனி' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் அகோரி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப். இந்நிலையில் இப்படம் குறித்து அவர் பேசும்போது..."இதில் நான் அகோரியாக நடிக்கிறேன். டைரக்டர் கஸ்தூரிராஜா கதையை சொன்னவுடன் இது எனக்கு புது மாதிரியான கதாபாத்திரமாக இருக்கும் என்று நினைத்து ஓ.கே.சொன்னேன். ஆரண்ய காண்டம், மாயவன் மாதிரி இது வேறு ஒரு கதைக்களம். என் உருவத்தை மட்டும் அல்ல. என் நடை உடை பாவனை எல்லாவற்றையுமே இது மாற்றும் படமாக இருக்கும். டைரக்டர் என்ன சொன்னாரோ அதை அப்படியே நான் பிரதிபலிக்கிறேன். நானாவது இந்த கதையில் ஆறு மாதங்கள் தான் ஊறி இருக்கிறேன். ஆனால் இயக்குனர் ஆறு ஆண்டுகளாக இதை டிரீம் சப்ஜெக்டாக சுமந்து கொண்டிருக்கிறார். சிவபக்த அகோரியாக நடிக்கிறேன். நல்லது செய்யும் முனீஸ்வரன் என்ற அகோரிக்கும் எல்லோரையும் அழிக்க நினைக்கும் பாண்டி என்கிற பேய்க்கும் நடக்கிற போராட்டம் தான் கதை.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மேலும் இப்படம் குறித்து இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியபோது.... "இந்த கதாபாத்திரத்திற்கு முதலில் நான் பேசியது ராஜ்கிரண் சாரிடம் தான். அவர் கதையை கேட்டு விட்டு இந்த கதை நிறைய வேலை வாங்கும். மலை, காடு எல்லாம் ஏறி இறங்க வேண்டி இருக்கும். அவ்வளவு எல்லாம் கஷ்டப்பட முடியாது. என்று சொல்லி விட அதன் பிறகு வேறு சில நடிகர்களையெல்லாம் கடந்து ஜாக்கியிடம் வந்து நின்றது இந்த கதை. கதையை கேட்டு முடித்த அவர் இதோ வருகிறேன் என்று வீட்டுக்குள் போனவர் அரை மணி நேரமாக ஆளையே காணோம். இவரும் நடிக்க மாட்டார் போலிருக்கே என்று வேறு நடிகர்களை மனதுக்குள் ஓட விட்டேன். வெளியே வந்த ஜாக்கி இடுப்பில் மஞ்சள் துணியை கட்டிக் கொண்டு இது மாதிரி தானே காஸ்டியூம் என்று கேட்க ஆடிப் போய் விட்டேன். என் கதைக்குள் இருந்த முனீஸ்வரன் கதாபாத்திரமாகவே மாறி இருந்தார். அந்தளவுக்கு சின்சியரான நடிகர் இவர். நடிகராக இல்லாமல் நல்ல நண்பராக பழகிக் கொண்டிருக்கிறோம். படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்திருக்கிறது. ஹாரர் படமாக 'பாண்டி முனி' வளர்ந்து கொண்டிருக்கிறது" என்றார்.

kasthuriraja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe