Skip to main content

'சர்கார்' தமிழ் டைட்டிலா? பிரபல நடிகரின் கேள்வியால் சர்ச்சை!

Published on 08/10/2018 | Edited on 08/10/2018
karunakaran

 

இப்போது சமூகவலைத்தளத்தில் ட்ரெண்ட்டில் இருப்பது நடிகர் கருணாகரன் விஜய் ரசிகர்களுடன் போட்டுக்கொண்டிருக்கும் சண்டை தான். கடந்த சில நாட்களாகவே நடந்து கொண்டிருக்கும் இந்த சண்டையில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் தன் போஸ்டுகளுக்கு மோசமாக கமன்ட் பதிவிட்டு வருவதால்  எனக்கு விஜய்யை பிடிக்காமல் போய்விட்டது என கருணாகரன் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் விஜய்யை விமர்சிக்கும் வகையில் சில பதிவுகளை போட்டுள்ளார்.

 

 

 

அதில்... "ஒரு நடிகரின் ரசிகர்கள் போடும் கமெண்டை வைத்து தான் அந்த நடிகரின் தரத்தை சொல்ல முடியும்"  என்றும் பின், "முட்டாள்தனமான கேள்விகள் கேக்காதீர்கள் குழந்தைகளே. நான் தமிழ்நாட்டை சேர்ந்தவன். நான் எப்போதாவது 'சர்கார்' தமிழ் டைட்டிலா..? என கேட்டேனா..?" என்றும் பின், "சர்கார் அடிமைகளே அடுத்த கேள்வி என் தாய் மொழியில் கேட்கப்போகிறேன்" என்றும் பின்,  "எனக்கு ஆதரவு தருகின்றேன் என மற்ற நடிகர்களின் ரசிகர்கள் தவறான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்" என்று பதிவிட்டு மேலும் சில கருத்துக்களையும்  பதிவிட்டுள்ளார். கருணாவின் இந்த ட்விட்டுகளுக்கு விஜய்-அஜித் ரசிகர்கள் தொடர்ந்து சண்டை போட்டு வருவது திரையுலகில் சர்ச்சையும், சலசலப்பும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்கார் உண்மையில் லாபமா...? நஷ்டமா...? - பிரபல விநியோகஸ்தர் அதிர்ச்சி தகவல் 

Published on 21/11/2018 | Edited on 21/11/2018
vijay

 

 

 

விஜய் - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள சர்கார் படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்  சென்னையில் போட்ட பணத்தை எடுத்துவிட்டோம் என ஒரு வாரத்திற்கு முன்பு திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது சர்கார் வசூல் குறித்து பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் பட லாபம், நஷ்டம் குறித்து பேசியபோது... "படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு கண்டிப்பாக போட்ட பணம் வந்திருக்கும். மேலும் சிலருக்கு லாபமும் கிடைத்திருக்கும். ஒரு எழுபதிலுருந்து என்பது சதவீதம் வரை  தமிழ்நாட்டில் வசூல் செய்திருக்கும். சொல்லப்போனால் விநியோகஸ்தர்களுக்கு பெரிய லாபம் இல்லை" என்றார்.

 

 

Next Story

கேரளாவிலும் சர்ச்சையில் சிக்கிய சர்கார் ! விஜய் மீது புதிய வழக்கு 

Published on 15/11/2018 | Edited on 15/11/2018
vijay

 

 

 

விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கிடையே படத்தில் தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அ.தி.மு.க தொண்டர்கள் தியேட்டர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி விஜய்யின் பேனர்களை  கிழித்தனர். இதைத்தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற அரசு வழங்கிய இலவச பொருட்களை தீயில் வீசி எரிக்கும் காட்சிகளை பட நிறுவனம் நீக்கியது. பின்னர் படத்தை மறுதணிக்கை செய்து திரையரங்குகளில் மறு வெளியீடு செய்தது படக்குழு. இந்நிலையில் தற்போது கேரளாவிலும் 'சர்கார்' படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. திருச்சூரில் உள்ள தியேட்டரில் விஜய் புகைப்பிடிக்கும் பேனர் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு திருச்சூர் சுகாதார துறை எதிர்ப்பு தெரிவித்து விஜய் மற்றும் கேரள விநியோகஸ்தர், தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர் ஆகியோர் மீது தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது. ஏற்கனவே கேரளாவிலுள்ள கொல்லத்தில் 'சர்கார்' படத்திற்காக நடிகர் விஜய்க்கு 175 அடியில் பேனர் வைத்து பின்னர் அதற்கு கேரள அரசு தடை விதித்ததையடுத்து அந்த பேனர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.