Skip to main content

ஸ்ட்ரைக்கை மீறுகிறார் கார்த்திக் சுப்புராஜ்? - தயாரிப்பாளர் கண்டனம்

Published on 06/04/2018 | Edited on 07/04/2018
mercury


நடனப்புயல் பிரபுதேவா வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் மெர்குரி. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சைலண்ட் த்ரில்லராக உருவாகி இருக்கும் இப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. தற்போது படஅதிபர்கள் போராட்டத்தால் தமிழ்நாட்டில் புதுபடங்கள் ஏதும் ரிலீசாகாத நிலையில் இப்படத்தின் டிரைலரை சமீபத்தில் வெளியிடுவதாக இயக்குனர் அறிவித்தார். பின்னர் அது காவிரி பிரச்சனைக்காக கைவிடப்பட்டது. இதையடுத்து தற்போது மெர்குரி படத்தை தமிழ் தவிர்த்து மற்ற மொழிகளில் வெளியிட கார்த்திக் சுப்புராஜ் முடிவு செய்துள்ளார். இப்படம் குறித்த நாளில் தமிழ் தவிர்த்து மற்ற மொழிகளில் வெளியாகும் என்று ட்விட்டரில் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜின் அந்த டுவிட்டுக்கு டிக் டிக் டிக் பட தயாரிப்பாளர் ஹிதேஷ் ஜபக் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுருந்தாவது...."ஒவ்வொரு தயாரிப்பாளரும் அவர்களது படத்திற்காக உழைத்து வருகிறார்கள். மெர்குரி படத்தை விட டிக் டிக் டிக் 3 மடங்கு செலவு அதிகமான படம். சைலண்ட் த்ரில்லர் படத்திற்கு ஏது மொழி. அதை அவர் தமிழில் மட்டும் ரிலீஸ் செய்ய மாட்டேன் என கூறுவது ஏற்கமுடியாதது. நாங்களும் எங்களது படத்தை ரிலீஸ் செய்ய காத்திருக்கிறோம். சில வேலைகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம் முடிந்த பிறகு படத்தின் வேலைகள் துவங்கி படம் விரைவில் ரிலீசாகும்" என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

புதிய அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி... ரசிகர்கள் மகிழ்ச்சி 

Published on 02/06/2018 | Edited on 04/06/2018
vijay sethupathi


சமூக வலைத்தளங்கள் ஆரம்பித்த புதிதில் சினிமா துறையினர் அதிலிருந்து விலகியே இருந்தனர். பின்னர் நாளடைவில் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களை வெகுவாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அவ்வப்போது புகைப்படங்களும், தன் படம் குறித்த அப்டேட்களையும் வெளியிட்டு வருகின்றனர். இருந்தும் சில பிரபலங்கள் இன்னமும் சமூக வலைத்தளங்கள் பக்கம் தலை காட்டாமலே உள்ளனர். அந்த வரிசையில் இருந்த நயன்தாரா, ஐஸ்வர்யா ராய் போன்ற பிரபலங்கள் சமீபத்தில் ட்விட்டரில் இணைந்துள்ளனர். இந்நிலையில் இதே போல் தற்போது விஜய்சேதுபதியும் ட்விட்டரில் புதிய கணக்கு ஒன்றை தொடங்கி உள்ளார்.  பொதுவாக நடிகர், நடிகைகள் பெயரில் போலி கணக்குகள் சமூக வலைத்தளங்களில் உள்ளன. ரசிகர்களும் அவற்றை உண்மை என்று நம்பி பின்தொடர்கிறார்கள். அதில் நடிகர், நடிகைகள் பெயரில் பல்வேறு போலி கருத்துக்களும் பதிவாகின்றன. இதனால் நடிகர்களுக்கு சிக்கல் ஏற்படுகின்ற காரணத்தால் தன் பெயரில் உள்ள போலிகளை அப்புறப்படுத்த விஜய்சேதுபதியே ட்விட்டரில் புதிய கணக்கை தொடங்கி உள்ளார். மேலும் அதில்... "Twitter - ல் நான் கூறியதாக நிறைய தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. அந்த கருத்துக்கள் என்னுடைய பெயரில் இயங்கும் போலிகளின் செயல் என்று தெரிவித்துக் கொள்கிறேன். #விஜய்சேதுபதி" என்று தன் முதல் பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் விஜய்சேதுபதியின் இந்த புதிய அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Next Story

நாம் நினைப்பதை விட கார்ப்பரேட்கள் கொடூரமானவை - கார்த்திக் சுப்புராஜ் கண்டனம் 

Published on 24/05/2018 | Edited on 24/05/2018
karthik subburaj


தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி நேற்று நடந்த 100வது நாள் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்து கலவரமாக மாறியது. இதனையடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் சுட்டதில் 13 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சி அடைந்த பல்வேறு தரப்பினர் தமிழக அரசுக்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்துக்கு  ரஜினி, கமல், விஷால், சத்யராஜ்  உட்பட பல திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், வீடியோ பதிவாகவும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்ற நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்.... "தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது வேதனையளிக்கிறது. நமது அரசு மற்றும் ஆட்சியாளர்கள் மீது பயம் வருகிறது. சில கார்ப்பரேட் நிறுவனங்கள் நாம் நினைப்பதை விட ரொம்ப கொடூரமானவயாக இருக்கின்றன" என பதிவிட்டுள்ளார்.