Skip to main content

"நான் சொன்னதும் சட்டையை போட்டு தரையில் உருள ஆரம்பித்துவிட்டார்" - நடிகர் விக்ரம் குறித்து கார்த்திக் சுப்பராஜ் பெருமிதம்

Published on 07/02/2022 | Edited on 07/02/2022

 

karthik subbaraj

 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம்,சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள மகான் திரைப்படம் வரும் 10 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மகான் படத்தில் நடிகர் விக்ரமுடனான அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

"விக்ரம் சாரிடம் சென்று மகான் ஸ்கிரிப்ட் கொடுத்தேன். அவரும் அதைப் படித்துப் பார்த்தார். பிதாமகன் மாதிரியான படங்கள் பண்ண விக்ரம் சாருக்கு தீனி போடுவது மாதிரி இந்தக் கதையில் ஏதாவது இருக்கிறதா என்று எனக்கு சந்தேகம் வந்தது. சாரிடம் கொஞ்சம் நெருங்கி பழக ஆரம்பித்த பிறகு, இந்தக் கதை உங்களுக்கு எந்த வகையிலாவது சேலஞ்சிங்காக இருக்கிறதா என்று கேட்டேன். அவருக்கு இந்தப் படம் மிகவும் திருப்தியாக இருந்ததாகக் கூறினார். இந்த சீன் இப்படித்தான் வரும் என்று நினைத்து நாம் எழுதியிருப்போம். ஆனால், நடிகர்கள் நடித்து முடித்த பிறகு அந்த சீன் அடுத்த லெவலுக்கு போயிருக்கும். அப்படி இந்தப் படத்திலும் நிறைய சீன்கள் உள்ளன.

 

விக்ரம் சாரின் சட்டையில் மண் ஓட்டுவது மாதிரி ஒரு சீன் இருக்கும். நான் பார்த்தவரைக்கும் ஒன்று சட்டையை மண்ணில் போட்டு புரட்டி எடுத்து வருவார்கள் அல்லது மண் எடுத்துக்கொண்டு வந்து சட்டையில் பூசுவார்கள். சட்டையில் மண் ஓட்ட வேண்டும் என்று விக்ரம் சாரிடம் சொன்னதும் சட்டையை போட்டுக்கொண்டு தரையில் உருள ஆரம்பித்துவிட்டார். சார் மண் எடுத்துவந்து சட்டையில் போட்டுக்கலாம் என்று நான் கூறியதற்கு, அது பார்க்க செயற்கையாக இருக்கும் என்று கூறிவிட்டார். அந்த அளவிற்கு அர்ப்பணிப்போடு படத்தில் நடித்தார். இது செட்டில் இருந்த அனைவருக்குமே ஒரு பாடமாக இருந்தது" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மத நல்லிணக்கம்; உண்மைச் சம்பவம்” - கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
karthik subburaj praised aishwarya rajinikanth lal salaam

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டின் போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் சங்கி கிடையாது” எனப் பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில், “சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பது அவருடைய பார்வை” என ரஜினி விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இன்று (09.02.2024) இப்படம் வெளியாகியுள்ளது. படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, “என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்” எனக் குறிப்பிட்டு ரஜினி அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனிடையே ரஜினி ரசிகர்கள் வழக்கம் போல் திரையரங்கு முன்பு கூடி பட்டாசு வெடித்து, மேள தாளத்துடன் படத்தை வரவேற்றனர். மேலும் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடினர். 

இப்படத்தை தற்போது கார்த்திக் சுப்புராஜ் பாராடியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தலைவர் ரஜினிகாந்தை மொய்தீன் பாய்யாக பார்ப்பது சூப்பராக இருந்தது. நம்மிடையே மத நல்லிணக்கத்தின் அவசியத்தை உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் படக்குழு சொல்லியிருக்கிறார்கள். அதற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள்” எனk குறிப்பிட்டுள்ளார். 

Next Story

விக்ரம் படத்தில் எஸ்.ஜே சூர்யா

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
sj suryah in in vikram chiyaan 62

விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் உருவாகும் இப்படம் ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. ஆனால் அதுவும் தற்போது தள்ளி போகவுள்ளதாக கூறப்படுகிறது.  இதனிடையே விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் நீண்ட இழுபறிக்கு பின் இம்மாதம் வெளியாகும் என கெளதம் மேனன் தெரிவித்திருந்தார். அதன் பிறகு எந்த அப்டேட்டும் படக்குழு வெளியிடவில்லை. 

இதனை தொடர்ந்து தனது 62வது படத்திற்காக சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமாருடன் கூட்டணி வைத்துள்ளார். ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில் தற்போது புது அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி எஸ்.ஜே சூர்யா இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. எஸ்.ஜே சூர்யா தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர், ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.