Skip to main content

உங்களைப் போன்ற நல்ல தலைவர் கிடைப்பதற்கு நாங்கள் தகுதியற்றவர்களாக இருக்கலாம்.... கார்த்திக் சுப்பராஜ் உருக்கம்!

Published on 29/12/2020 | Edited on 29/12/2020

 

Karthik Subbaraj

 

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான ரஜினிகாந்த், இம்மாத தொடக்கத்தில் தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தினார். அவரது அரசியல் வருகை குறித்து நீடித்து வந்த குழப்பம் அவ்வறிவிப்பு மூலம் முடிவுக்கு வந்ததால் அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். மேலும், இம்மாத இறுதியில் தனது கட்சி தொடர்பான முழு விவரங்களையும் விரிவாக அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

 

இதனையடுத்து, பாதியில் நிறுத்தப்பட்டிருந்த 'அண்ணாத்த' படத்தின் பணிகளை முடித்துக் கொடுக்கும் முனைப்போடு ஹைதராபாத் விரைந்தார். கரோனா காரணமாகத் தடைப்பட்டிருந்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி முழுவீச்சில் நடந்து வந்த நிலையில், எதிர்பாராத விதமாக படக்குழுவினர் சிலருக்கு கரோனா தொற்று உறுதியானது. இது ரஜினி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வதிர்ச்சி அடங்குவதற்குள் ரத்த அழுத்தம் காரணமாக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது சினிமா வட்டாரத்தில் மட்டுமின்றி தமிழக அரசியல் களத்திலும் பரபரப்பாக பேசப்பட்டது. அதனையடுத்து, உடல்நலம் சீராகி வீடு திரும்பிய ரஜினிகாந்தை, தொடர் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். 

 

கட்சி தொடர்பான விவரங்களை அறிவிப்பதாக ரஜினிகாந்த் கூறிய நாளுக்கு, மூன்று நாட்கள் மட்டுமே எஞ்சியிருந்ததால் குழப்பம் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக 'தான் அரசியலுக்கு வரப்போவதில்லை' என்ற அறிவிப்பு ரஜினிகாந்த் தரப்பில் இருந்து இன்று காலை வெளியானது. கனத்த இதயத்துடன் இம்முடிவை ஏற்றுக்கொண்ட அவரது ரசிகர்கள், தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், ரஜினியின் தீவிர ரசிகரும் திரைப்பட இயக்குனருமான கார்த்திக் சுப்பராஜ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தலைவா... வருத்தப்பட வேண்டாம். உங்களைப் போன்ற நல்ல தலைவர் கிடைப்பதற்கு நாங்கள் தகுதியற்றவர்களாக இருக்கலாம். நீங்கள் எங்களுக்கு முக்கியம் தலைவா. எப்போதும் போல உங்களை நேசிக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மத நல்லிணக்கம்; உண்மைச் சம்பவம்” - கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
karthik subburaj praised aishwarya rajinikanth lal salaam

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டின் போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் சங்கி கிடையாது” எனப் பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில், “சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பது அவருடைய பார்வை” என ரஜினி விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இன்று (09.02.2024) இப்படம் வெளியாகியுள்ளது. படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, “என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்” எனக் குறிப்பிட்டு ரஜினி அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனிடையே ரஜினி ரசிகர்கள் வழக்கம் போல் திரையரங்கு முன்பு கூடி பட்டாசு வெடித்து, மேள தாளத்துடன் படத்தை வரவேற்றனர். மேலும் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடினர். 

இப்படத்தை தற்போது கார்த்திக் சுப்புராஜ் பாராடியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தலைவர் ரஜினிகாந்தை மொய்தீன் பாய்யாக பார்ப்பது சூப்பராக இருந்தது. நம்மிடையே மத நல்லிணக்கத்தின் அவசியத்தை உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் படக்குழு சொல்லியிருக்கிறார்கள். அதற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள்” எனk குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“விஜயகாந்தின் அந்த ஒரு வார்த்தை எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன்” - கார்த்திக் சுப்புராஜ்

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
karthik subburaj about vijayakanth

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

இந்த நிலையில், விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத பல திரைப் பிரபலங்கள் தேமுதிக அலுவலகத்தில் உள்ள நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில், விஜயகாந்த் உருவப் படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, விஜயகாந்த்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் படம் எடுப்பதற்கு முன்னாடி குறும்படம் எடுத்திட்டிருந்த டைம், அவருடைய டிவியில் ஒரு குறும்பட போட்டிக்காக அனுப்பியிருந்தேன். அப்போதுதான் அவரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய படம் பார்த்துவிட்டு கண்டிப்பா நீ படம் பண்ணிடுவப்பா... என்று சொன்னார். அந்த ஒரு வார்த்தை எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தது. அதன் பிறகு அவருடன் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. மதுரையிலிருந்து வந்து இவ்ளோ பெரிய லெஜண்டா வந்திருக்காரு. அவருடைய இழப்பு சினிமா துறைக்கு ஒரு மிகப்பெரிய இழப்பு” என்றார்.