''தமிழக முதல்வரே தயவுசெய்து இதை ஒத்திப்போடுங்கள்'' - கார்த்திக் சுப்புராஜ் வேண்டுகோள்!

hnfh

கரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகமே பீதியில் இருக்கிறது. இதனால் இந்தியாவில் பல லட்சம் மக்கள் தங்களின் வாழ்வாதாராத்தை இழந்து தவிக்கின்றனர். அதேபோல் தமிழகத்திலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.

குறிப்பாகக் கடந்த சில நாட்களாகவே கரோனா தொற்றின் எண்ணிக்கை சென்னையில் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் டாஸ்மாக் திறப்பது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கரோனா தொற்று இருப்பவர்கள் அதிகரித்து வரும் இந்த வேளையில் டாஸ்மாக்கை மீண்டும் திறப்பது ஆபத்தான யோசனையாக இருக்கிறது. இது இன்னும் பெரிய குழப்பத்துக்கு இட்டுச் செல்லலாம். தமிழக முதல்வரே, தயவுசெய்து இதை ஒத்திப்போடுவதைப் பற்றி பரிசீலனை செய்யுங்கள்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

karthick subburaj
இதையும் படியுங்கள்
Subscribe