தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சூர்யா தனது 25வது ஆண்டு திரைப்பயணத்தை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் #25yearsofsuryaism என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இது தொடர்பாக சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "கனவு காணுங்கள், நம்புங்கள்" என குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் கார்த்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யா குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "அவர் தனது ஒவ்வொரு மைனஸையும் பிளஸாக ஆக மாற்ற இரவும் பகலும் உழைத்தார். தனது சொந்த சாதனைகளை முறியடிக்க மட்டுமே கவனம் செலுத்தினார். ஒரு நபராக, அவர் ஏற்கனவே தாராளமான அன்பை பெரிதாக்கியுள்ளார். மேலும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையை தகுதியுடையதாக வடிவமைத்துள்ளார். அதுதான் என் பிரதர்" என குறிப்பிட்டுள்ளார்.