நடிகர் கார்த்தி தற்போது நடித்து கொண்டிருக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தில் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் செங்கல்பட்டு அருகே விளைநிலங்களுக்கு நேரில் சென்று இயற்கை விவசாய முறையை நேரில் பார்த்தார். அங்குள்ள நிலத்தில் காளைகளை ஏரில் பூட்டி உழுதார். மேலும் தனது விளைநிலங்களில் விவசாயம் செய்து வருகிறார். அவ்வப்போது விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிடும் நடிகர் கார்த்தி விவசாயத்தில் தனது புதுமையான அனுபவங்களை பற்றி பேசும்போது..."விளைநிலங்களில் நடக்கும் இயற்கை விவசாயத்தை நேரில் பார்த்தேன். விவசாயிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர். இயற்கை விவசாயத்தை பார்த்து பல புதுமையான விஷயங்கள் கற்றுக்கொண்டேன். இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சில அர்த்தங்களை தந்தது. நமது ஆணிவேரான விவசாயத்தை அனைவரும் காப்போம். அங்கே கிடைத்த இயற்கையான காற்று, அங்கு சந்தித்த மனிதர்கள், கால்நடை, கோழி அனைத்து காட்சிகளும் கண்முன் வந்து செல்கின்றன. ஒவ்வொருவரும் விவசாய நிலங்களுக்கு சென்று பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.
ஆணிவேரான விவசாயத்தை காப்போம்...கார்த்தி பேச்சு
சார்ந்த செய்திகள்
Next Story
கேரளா மழை வெள்ளத்திற்கு லட்ச கணக்கில் நிதி அளித்த சூர்யா - கார்த்தி
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரளாவில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து கேரளா அரசு தற்போது மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டு வரும் நிலையில் கேரளா முதல்வர் பிணரயி விஜயன் நிவாரண நிதி அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை அறிந்த நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து 25 லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குகியுள்ளனர். மேலும் 'கடவுளின் தேசம் என்று புகழப்படும் கேரளாவில் இந்நிலையை கண்டு மனம்வருந்துகிறோம், வெகுவிரைவில் இயல்புநிலை திரும்ப பிராதிக்கிறோம்' என குறிப்பிட்டுள்ளனர்.
Next Story
'அரசியல் ஒன்றும் இரண்டரை மணி நேர படம் கிடையாது' - பிரியா பவானி ஷங்கர்
மேயாதமான், கடைக்குட்டி சிங்கம், ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர் ரஜினி, கமலின் அரசியல் பயணம் பேசியபோது... "நாம் எப்போதுமே நடிகர்களிடமிருந்து சில விஷயங்களை எதிர்பார்க்கிறோம். அவர்கள் திரையில் பேசும் வசனங்களை அவர்களுடைய நிஜ வாழ்க்கையோடு ஒப்பிடுகிறோம். எல்லோருக்குமே அரசியலில் தொடர்பு இருக்கிறது. ரஜினி, கமல் இருவரையுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர்கள் அரசியலில் குதித்திருக்கிறார்கள். அவர்கள் மிகப்பெரிய நடிகர்கள் என்பதால் நம்ப வேண்டும் என்ற அவசியமில்லை. அரசியல் ஒன்றும் இரண்டரை மணி நேர படம் கிடையாது, அவர்கள் தேர்தலில் ஜெயித்து வெற்றிபெற்று ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்யப்போகிறார்கள். இந்த விஷயத்தில் நான் ஒரு சாதாரண குடிமகளாக முடிவெடுப்பேன். ஆனால் அவர்களுடைய படம் வெளியானால் நான் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன். அதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை" என்றார்.