Skip to main content

"எம்.ஜி.ஆரை பற்றி மட்டும் தான் பேசுவாங்க" - கார்த்தி

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

karthi about actress vasantha

 

பழம்பெரும் நடிகை வசந்தா (82) காலமானார். எம்.கே.தியாகராஜ பாகவதர் நாடகக் குழுவில் தனது நடிப்பு பயணத்தை ஆரம்பித்த இவர், பின்பு திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்தார். 1965 ஆம் ஆண்டு வெளியான 'இரவும் பகலும்' படத்தில் ஜெயசங்கருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். பின்பு  அதே ஆண்டு வெளியான 'கார்த்திகை தீபம்' படத்தில் அசோகனுக்கு ஜோடியாக நடித்தார். மேலும் அடுத்த தலைமுறை நடிகர்களான ரஜினி மற்றும் கமல் படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரஜினிக்கு அம்மாவாக 'ராணுவ வீரன்' படத்திலும் ஸ்ரீதேவிக்கு அம்மாவாக கமல் நடித்த 'மூன்றாம் பிறை' படத்திலும் நடித்தார். 

 

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள வசந்தா சமீப காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று (19.05.2023) மாலை உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கார்த்தி இன்று காலை வசந்தாவின் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

 

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இதை எதிர்பார்க்கவே இல்லை. 6 மாதத்துக்கு முன்னால் பார்த்த பொழுது கூட ஆரோக்கியமாக இருந்தாங்க. எப்போவுமே பாசமா இருக்கிற ஒருத்தவங்க. நடிகர் சங்கத்துக்கு நாங்க வந்த பிறகு ரொம்ப சப்போர்ட்டிவா இருந்தாங்க. நேரில் பார்க்கும் பொழுது எம்.ஜி.ஆரை பற்றி மட்டும் தான் பேசுவாங்க. எம்.ஜி.ஆருடன் அவங்க சின்ன வயதில் வளர்ந்ததால் நடிகர் சங்கத்துக்கு எம்.ஜி.ஆர் எவ்வளவு பண்ணியிருக்கார் என்பதை சொல்லுவாங்க. நீங்களும் நல்லா பண்ணுவீங்க, நிச்சயம் நல்லது நடக்கும், தைரியமா இருங்க என்று தவறாமல் சொல்லுவாங்க. எப்பவுமே ஒரு பாசமுள்ள தாயுள்ளம் கொண்டவரா அவர்களை பற்றிய நினைவு இருந்துகிட்டே இருக்கும்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.

Next Story

பூஜையுடன் பணிகளைத் தொடங்கிய சங்க நிர்வாகிகள்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nadigar sangam building works start again with pooja

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்த பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

nadigar sangam building works start again with pooja

இந்த நிலையில் இன்று சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் தொடங்கியது. பூஜை நடத்தி பணிகளை தொடங்கினார்கள் சங்க நிர்வாகிகள். இந்த பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.