Skip to main content

‘கே’ என கிண்டலடித்தவருக்கு நக்கலாக பதிலடி கொடுத்த பிரபல இயக்குனர்...

Published on 19/08/2019 | Edited on 20/08/2019

இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான தர்மா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கரண் ஜோஹர்.  இவரை ஓரினச் சேர்க்கையாளர் என்று ட்விட்டரில் கிண்டலடித்தவருக்கு உடனடியாக பதிலடி கொடுத்துள்ளார். 
 

KAran johar

 

 

இவர் தொடக்கத்தில் இயக்குனராக பாலிவுட்டில் வலம் வந்தார். அதன்பின் தன்னுடைய குடும்ப தொழிலான படங்கள் தயாரிப்பதையும் சேர்த்து கவனிக்க தொடங்கிவிட்டார். பாகுபலி 2 படத்தை பாலிவுட்டில் வெளியிட்டு மிகப்பெரும் வசூலை வாரிக்குவித்தார்.
 

2017-ல் தனது வாழ்க்கைக் கதையை புத்தகமாக வெளியிட்ட கரண் ஜோஹர், அதில் தான் ஒரு தன் பாலின உறவாளர் தான் என்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தார். 
 

சமீபத்தில் திரைப்பட விமர்சகர் ராஜிவ் மன்சத் கரண் ஜோஹரை சந்தித்தது குறித்து ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அதில் ஒரு ட்விட்டர் ஃபாலோவர் சம்மந்தமே இல்லாமல் கரண் ஜோஹரை பற்றி  ‘கரண் ஜோஹர் பற்றிப் படம் எடுத்தால் அந்தப் படத்துக்கு கரண் ஜோஹார்: தி கே (the gay) என்று பெயர் வைக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
 

இதற்கு பதிலடி கொடுத்த கரண், “உண்மையாக யோசிக்கும் அறிவுஜீவி நீங்கள். இத்தனை நாளா எங்கு மறைந்திருந்தீர்கள்? நீங்கள் உயிருடன் வாழ்ந்துகொண்டிருப்பதற்கு நன்றி.  ட்விட்டரில் இன்று மிகவும் ஆக்கத்திறனுடைய குரலாக மாறியதற்கு நன்றி” என்று பதிவிட்டிருந்தார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

"என் பாலியல் வாழ்க்கை சுவாரஸ்யமாக இல்லை" - டாப்ஸி மறைமுக தாக்கு

Published on 09/08/2022 | Edited on 09/08/2022

 

Taapsee Pannu talks about Karan Johar’s show

 

தமிழ் , தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் டாப்ஸி. அந்த வகையில் தமிழில் ஜெயம் ரவியின் 'ஜன கன மன' படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்தியில் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள 'டோபரா' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதனால் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் டாப்ஸி.

 

ad

 

அதில் ஒரு பகுதியாக ஒரு நிகழ்ச்சியில் டாப்ஸியிடம் பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் நடத்தும் நிகழ்ச்சி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டாப்ஸி, "அந்த நிகழ்ச்சியில் பேசும் அளவிற்கு என் பாலியல் வாழ்க்கை சுவாரஸ்யமாக இல்லை" எனப் பதிலளித்துள்ளார். டாப்ஸியின் இந்த பதில் தற்போது பாலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

 

கரண் ஜோகர் நடத்தும் நிகழ்ச்சியில், பல முன்னணி திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் டாப்ஸி இதுவரை கலந்துகொள்ளவில்லை. மேலும் அந்த நிகழ்ச்சியில் பிரபலங்களிடம் அவர்களது பாலியல் வாழ்க்கை குறித்து எப்போதும் கரண் ஜோகர் கேள்வி எழுப்புவது வழக்கம். அவரது கேள்வி பாலிவுட்டில் பலமுறை சர்ச்சையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Next Story

தலைப்பு திருட்டு சர்ச்சையில் கரண் ஜோஹர் விளக்கம்...

Published on 27/11/2020 | Edited on 27/11/2020

 

karan johar

 

 

பாலிவுட்டை சேர்ந்த இயக்குனர் மதுர் பண்டார்கர், ‘பாலிவுட் வைவ்ஸ்’ என்ற தலைப்பை தனது அடுத்த படத்திற்காக பதிவு செய்துள்ளார். ஆனால், கரண் ஜோஹர் நெட்ஃப்ளிக்ஸில் உருவாகும் நிகழ்ச்சி ஒன்றிற்கு இதை தலைப்பாக வைத்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

இது தொடர்பாக கடந்த வாரமே மதுர் பண்டார்கர், கரண் ஜோஹரைச் சாடிப் பதிவிட்டிருந்தார். இந்தத் தலைப்பை கரண் ஜோஹர் தன்னிடம் கேட்டதாகவும், தானும், தயாரிப்பாளர் சங்கமும் ஏற்கனவே அதை மறுத்துவிட்டதாகவும், எனவே இந்தத் தலைப்பை லேசாக மாற்றிப் பயன்படுத்துவதெல்லாம் எந்த அடிப்படையில் பார்த்தாலும் தவறு என்று பண்டார்கர் குறிப்பிட்டிருந்தார்.

 

மேலும், இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், இந்தியத் திரைப்பட, தொலைக்காட்சி இயக்குனர்கள் சங்கம், மேற்கிந்தியத் திரை ஊழியர்கள் கூட்டமைப்பு எனப் பல அமைப்புகள் மூலமாக முறையாக நோட்டீஸும் அனுப்பியுள்ளார். ஆனால், கரண் ஜோஹரின் தர்மா ப்ரொடக்‌ஷன்ஸ் இதற்கு பதிலளிக்கவில்லை.

 

இன்று இந்த நிகழ்ச்சி வெளியாகவிருக்கும் நிலையில் கரண் ஜோஹர், பண்டார்கருக்குக் கடிதம் ஒன்றை எழுதி தனது சமூக வலைதளத்தில் நேற்று பகிர்ந்துள்ளார்.

 

"நமக்குள் நீண்ட காலமாக நட்பு இருந்து வருகிறது. பல வருடங்களாக இந்தத் துறையில் இருவரும் இருந்து வருகிறோம். உங்கள் படைப்புகளின் தீவிரமான ரசிகன் நான். என்றுமே உங்களுக்கு நல்லதே நடக்க வேண்டும் என விரும்பியிருக்கிறேன்.

 

நீங்கள் எங்கள் மீது வருத்தத்தில் இருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும். கடந்த சில வாரங்களாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனையை உருவாக்கியிருந்தால் அதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அதேநேரம் நாங்கள் புதிதாக, வித்தியாசமான ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

 

இது உண்மை மனிதர்களைப் பற்றிய நிகழ்ச்சி என்பதால் 'தி ஃபேபுலஸ் லைவ்ஸ் ஆஃப் பாலிவுட் வைவ்ஸ்' (The Fabulous Lives of Bollywood Wives) என்கிற தலைப்பை தெர்ந்தெடுத்திருக்கிறோம். எங்கள் தலைப்பு தனித்துவமாக இருப்பதால், இதற்கு முன் இந்தத் தலைப்பால் உங்களுக்கு ஏற்பட்டிருந்த வருத்தம் இப்போது இருக்காது என நினைக்கிறேன்.

 

மேலும், எங்கள் சீரிஸை 'ஃபேபுலஸ் லைவ்ஸ்' என்கிற ஹேஷ்டேகின் கீழ்தான் அனைத்து சமூக வலைதளங்களிலும் விளம்பரப்படுத்தி வருகிறோம். இந்தப் பெயரை வைத்துதான் இந்தத் தொடர் வரிசையை உருவாக்கவிருக்கிறோம். எங்கள் சீரிஸின் தன்மை, ரசிகர்கள் என அனைத்தும் வித்தியாசமானவை. அது உங்களது படைப்புக்கு இடையூறாக இருக்காது என்று உறுதியுடன் கூறுகிறோம்.

 

நாம் இந்தப் பிரச்சினையைக் கடந்து வந்து ரசிகர்களுக்காகத் தொடர்ந்து சிறப்பான படைப்புகளைத் தருவோம் என்று நம்புகிறேன். உங்கள் அத்தனை முயற்சிகளுக்கும் என் வாழ்த்துகள். உங்கள் படைப்பைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்" என்று கரண் ஜோஹர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.