Skip to main content

அஜித் பட ஸ்டைலில் உருவாகும் 'காந்தாரா 2' - வெளியான சுவாரசியத் தகவல்

Published on 21/01/2023 | Edited on 21/01/2023

 

kantara 2 update

 

'கே.ஜி.எஃப்' படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய 'காந்தாரா' படம் கடந்தாண்டு இறுதியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரைப் பிரபலங்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டினர். சமீபத்தில் கூட கமல்ஹாசன் பாராட்டி இருந்தார். 

 

வசூலிலும் சக்கை போடு போட்ட நிலையில், மொத்தம் ரூ.350 கோடிக்கும் மேலாக உலகம் முழுவதும் வசூல் ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், 95வது ஆஸ்கர் விருது போட்டிக்கு தனிப்பட்ட முறையில் படக்குழு சார்பில் அனுப்பப்பட்டது. சமீபத்தில் ஆஸ்கர் குழு வெளியிட்ட விருதுக்கு தகுதியான படங்களின் பட்டியலில் காந்தாரா படமும் இடம்பெற்றது. நாமினேஷன் பட்டியல் வருகிற 24ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

இதையடுத்து ரிஷப் ஷெட்டி அண்மையில் பூதகோலா விழாவில் கலந்துகொண்டு உண்மையான பஞ்சுருளியாக இருப்பவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். ஏற்கனவே காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் எனப் படக்குழுவால் தகவல் சொல்லப்பட்ட நிலையில், தற்போது படத்தின் கதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 

 

இது தொடர்பாக ஒரு ஆங்கில ஊடகத்தில் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் கூறுகையில், "காந்தாரா 2-ன் கதை அதன் தொடர்ச்சியாக இருக்காது. படத்தின் முந்தைய பகுதியில் நடக்கும் கதையாக இருக்கும். கிராம மக்கள், தெய்வம் மற்றும் பிரச்சனையில் இருக்கும் ராஜா ஆகியோருக்கு இடையேயான உறவைப் பற்றி விவரிக்கும் வகையிலும் அந்த ராஜாவை சுற்றியுள்ள நிலங்களையும் மக்களையும் காப்பாற்ற இயற்கையுடன் போராடும் விதமாக இருக்கும்" எனக் கூறியுள்ளார். 

 

மேலும் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படம் வெளியாகும் எனவும் அதற்கான கதை எழுதும் பணியில் ரிஷப் ஷெட்டி ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 

பெரும்பாலும் ஒரு படத்தின் இரண்டாம் பாகம், அதன் தொடர்ச்சியாகவே இருக்கும். ஆனால், சில படங்களில் இரண்டாம் பாகம் அதன் முந்தைய கதையை விவரிக்கும் வகையில் அமைந்து இருக்கும். தமிழில் 'பில்லா 2' படத்தின் கதை இந்த ஸ்டைலில் இருக்கும். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இப்போது இந்த ஸ்டைலில் உருவாகவுள்ள காந்தாரா 2 படம் வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கார் கவிழ்ப்பு - பதறவைக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு வீடியோ

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
ajithkumar vidaamuyarchi shooting spot video

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின், திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அப்போது கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

கடந்த ஜனவரி மாதம் அஜர்பைஜானில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிப்பு வெளியானது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்பு கடந்த மாதம், அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிகைச்சை பெற்று வீடு திரும்பினார். பின்பு தான் நடத்தி வரும் பைக் கம்பெனியின் பணிகளை மேற்கொண்டார். மீண்டும் பைக் பயணத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஒரு காரில் அஜித்தும் ஆரவ்வும் பயணிக்கின்றனர். அப்போது கார் கவிழ்ந்து விழுகிறது. இந்த காட்சி கடந்த நவம்பரில் படமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கிரிக்கெட் வீரர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித் - புகைப்படங்கள் வைரல்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
ajith kumar in cricketer natarajan birthday party

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன். ஐபிஎல் தொடரில்,  சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவருடைய பந்துவீச்சு, பலரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக “யார்க்கர் கிங்” என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் இந்திய அணிக்காக விளையாடினார். அப்போது இந்திய அணி வெற்றி பெற அவருடைய பந்து வீச்சும் முக்கிய காரணமாக அமைந்தது. 

இதனிடையே தனது சொந்த ஊரில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் கிரிக்கெட் மைதானம் தொடங்கி நடத்தி வருகிறார். இவரது பயோ-பிக் உருவாகுவதாகவும் அதில் சிவகார்த்திகேயன் நடராஜனாக நடிக்கவுள்ளதாகவும் 2022ஆம் ஆண்டு தகவல் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் அதுகுறித்து வெளியாகவில்லை. 

ajith kumar in cricketer natarajan birthday party

இந்த நிலையில், இன்று நடராஜன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி இரவு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். மேலும் நடராஜனுக்கு கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் இந்த விழா நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட், பேட், அக்லி படத்தில் நடிக்கவுள்ளார்.