Advertisment

"இந்த கிருமி என் உடலில் கொண்டாட்டமாக இருந்து வருகிறது" - கங்கனா ரணாவத் எரிச்சல்!

ghfdhdf

Advertisment

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில், கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

இந்த நிலையில், நடிகை கங்கனா ரனாவத்துக்கு தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு உடல் சோர்வாக, பலவீனமாக இருந்தது. கண்களில் எரிச்சல் இருந்தது. ஹிமாச்சல் கிளம்பலாம் என்று இருந்தேன். எனவே நேற்று (07.05.2021) பரிசோதனை செய்துகொண்டேன். இன்று எனக்குக் கோவிட் தொற்று இருப்பதாக முடிவுகள் வந்துள்ளன. என்னைதனிமைப்படுத்திக்கொண்டுவிட்டேன்.

இந்தக் கிருமி என் உடலில் கொண்டாட்டமாக இருந்துவருவது எனக்கு சுத்தமாகத் தெரியவில்லை. இப்போது எனக்குத் தெரிந்துவிட்டது என்பதால் அதை நான் அழிப்பேன். மக்களே, எதற்கும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சக்தியைஅனுமதிக்காதீர். நீங்கள் பயந்தால் அது உங்களை இன்னும் பயமுறுத்தும். வாருங்கள் இந்த கோவிட்-19 கிருமியை அழிப்போம். இது வெறும் சிறு காய்ச்சல் மட்டுமே. அதிகமான ஊடக வெளிச்சத்தால் மக்களைப் பயமுறுத்திவருகிறது. ஹர ஹர மஹாதேவ்" என பதிவிட்டுள்ளார்.

Kangana Ranaut
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe