bfbdndf

இயக்குநர் ஏ.எல். விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்துவருகிறார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்றதையடுத்து, இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இதையடுத்து ‘தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, ‘தலைவி’ திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.

Advertisment

bvdsbsdfbsd

இந்த நிலையில் கரோனா 2வது அலை நாடு முழுவதும் பரவிவருவதால் பல மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, திரையரங்குகள் காலவரையறையின்றி மூடப்பட்டன. இதனால், பான் இந்தியா படமான 'தலைவி' படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைத்திருப்பதாகப் பட நிறுவனம் சில மாதங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் 'தலைவி' படம் வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் பணிகளுக்காக தற்போது சென்னை வந்துள்ள நடிகை கங்கனா ரனாவத், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைத்தார். பின்னர் எம்.ஜி.ஆர் சமாதிக்கும், அருகில் உள்ள கலைஞர் கருணாநிதி சமாதிக்கும் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Advertisment