Advertisment

'தலைவி' படம் குறித்து கங்கனா ரணாவத் ட்வீட்!

Kangana Ranaut

இயக்குநர் ஏ.எல்.விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகிறார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்றதையடுத்து, இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="1b4a331d-af6c-4222-ac90-aac38258a6be" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside_37.png" />

Advertisment

இந்த நிலையில், தலைவி படத்திற்கான டப்பிங் பணியில் தான் ஈடுபட்டு வருவதாக நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தலைவி படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2021-ஆம் ஆண்டு தொடங்கியது முதல் என்னுடைய மாதவிடாய் நாட்களில் கூட சிறு ஓய்வு கிடைக்கவில்லை. இதைக்குறையாகக் கூறவில்லை. உங்களிடம் பகிர்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பட வெளியீட்டுத் தேதியான ஏப்ரல் 23-க்கு இரு மாதத்திற்கும் குறைவான நாட்களே இருப்பதால், தலைவி படத்தின் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Kangana Ranaut thalaivi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe