Skip to main content

ஓ.டி.டி-யும் ஆபாசத் தளங்களும் ஒன்றுதான் - கங்கனா ரனாவத் காட்டம்!

Published on 24/10/2020 | Edited on 24/10/2020

 

kangana ranau t


                                                      
பிரபல  ஓ.டி.டி  நிறுவனமான ‘ஈரோஸ் நவ்’ நவராத்திரி பண்டிகையை ஒட்டி இரண்டு  விளம்பர போஸ்டர்களை வெளியிட்டது. அது ஆபாசமாகவும் மத உணவுர்களைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. சமூக வலைதளங்களில் ஈரோஸ் நவ் தளத்தைப் புறக்கணிக்கக் கூறி '#BoycottErosNow' என்ற ஹாஷ்டேகும் ட்ரெண்டானது.


இந்த நிலையில் பிரபல இந்தி நடிகையான கங்கனா ரனாவத், ஈரோஸ் நவ் உள்ளிட்ட ஓ.டி.டி தளங்களும் ஆபாசத் தளங்களாகவே இருப்பதாக விமர்சித்துள்ளார். ஈரோஸ் நவ் வெளியிட்ட போஸ்டர்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்த்துள்ள அவர், "நாம் சினிமாவை திரையரங்கில் குழுவாகப் பார்க்கும் முறையைப் பாதுகாக்க வேண்டும். தனிப்பட்ட சிலரின் பார்வைக்காக பாலியல் உள்ளடக்கத்தைச் சேர்ப்பதை விட பார்வையாளர்களை அதிக அளவில் கவர்ந்திழுப்பது மிகவும் கடினம். கலையை டிஜிட்டல் மயமாக்குவதில் இந்த மாதிரியான சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது. எல்லா ஓ.டி.டி தளங்களும் ஆபாசத் தளங்களாவே இருக்கின்றன.

 

சர்வதேச ஓ.டி.டி தளங்களில்கூட உள்ளடக்கம் பரபரப்பாக இருக்க வேண்டும் என்றால் அவற்றில் வெளிப்படையான பாலுறவுக் காட்சிகள், கொடூ'ரமான வன்முறை காட்சிகளை உருவாக்க வேண்டியுள்ளது. அடிப்படையில் பார்வையாளர்களின் பாலியல் பசியைத் துண்டுவது போன்ற உள்ளடக்கத்தை தவிர, வேறு உள்ளடக்கங்கள் நிர்வாகத்தினரால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. 

 

ஒருவர் உடனடித் திருப்திக்காக ஹெட்ஃபோன் மாட்டிக் கொண்டு தனியாகப் படம் பார்ப்பது அந்தத் தளங்களின் தவறல்ல. திரைப்படங்கள், ஒட்டுமொத்த குடும்பம், குழந்தைகள், அக்கம் பக்கத்தினருடன் பார்க்கும் ஒரு சமூக அனுபவமாக இருக்க வேண்டும்.

 

சமூகமாகச் சேர்ந்து பார்ப்பது நமது விழிப்புணர்வை அதிகரிக்கும். நாம் பார்க்கும் ஒரு விஷயத்தை இன்னொருவரும் பார்க்கிறார் எனும்போது, அவர்கள் நம்மைப் பற்றி எப்படி நினைக்கிறார்களோ அப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவோம். கவனமாக இருப்போம். நமது மூளைக்கும், உணர்ச்சிகளுக்கும் தரும் விஷயங்களில் தணிக்கை மிக முக்கியம். தணிக்கை என்பது நமது மனசாட்சியாகக் கூட இருக்கலாம்” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். 

 

cnc

 

சமூக வலைதளங்ககளிலும் பல்வேறு தரப்பிலும் எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து ஈரோஸ் நவ் நிறுவனம் அந்த போஸ்டர்களை நீக்கியதோடு மன்னிப்பும் கேட்டுள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "நாங்கள் எல்லா கலாச்சாரங்களையும் சமமாக மதிக்கிறோம். யாருடைய உணர்வையும் புண்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல. நாங்கள் அந்த போஸ்டர்களை நீக்கிவிட்டோம். மேலும், அது யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்திருந்தால், வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் கூறப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நான் பெருமைமிக்க இந்து” - மாட்டிறைச்சி சர்ச்சைக்கு கங்கனா விளக்கம்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
kangana explained beaf issue

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. மேலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த தேர்தலில் நடிகை கங்கனா ரணாவத் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அதனால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும், அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் “நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்?” என கேள்வி எழுப்பியது சர்ச்சையானது. 

இதைத் தொடர்ந்து தற்போது கங்கனா 2019ஆம் ஆண்டு பேசிய கருத்து தற்போது வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியது. காங்கிரஸ் தலைவர் விஜய் வாடேட்டிவார், இந்தப் பதிவை வெளியிட்ட நிலையில் அதில், “மாட்டிறைச்சி சாப்பிடுவதிலோ அல்லது வேறு எந்த இறைச்சி சாப்பிடுவதிலோ தவறில்லை. இது மதத்தைப் பற்றியது அல்ல” என பதிவிட்டிருந்தார். மேலும் “வீட்டை விட்டு வெளியேறிய போது மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என தாயார் தடை விதித்தார். ஆனால் அந்த மாட்டிறைச்சியில் என்னதான் இருக்கிறது என்பதற்காக நான் அதை சாப்பிட்டும் பார்த்தேன்” என கங்கனா பேசியிருந்ததாக கூறப்படுகிறது.  

இந்த நிலையில் இந்த கருத்து சர்ச்சையானது குறித்து விளக்கமளித்துள்ள கங்கனா, “நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த இறைச்சியையும் சாப்பிடாத பெருமைமிக்க இந்து. நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதாக என்னைப் பற்றி ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. நான் பல தசாப்தங்களாக யோக மற்றும் ஆயுர்வேத வாழ்க்கை முறையை ஆதரித்தும், ஊக்குவித்தும் வருகிறேன். அதனால் இது போன்ற யுக்திகள் என்னுடைய இமேஜை ஒன்னும் செய்யாது. என் மக்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். அவர்களை யாரும் தவறாக வழிநடத்த முடியாது” என அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

சர்ச்சையான பேச்சு - ஆதாரத்தை வெளியிட்ட கங்கனா

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
kangana ranaut explained subhas chandra bose issue

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த தேர்தலில் நடிகை கங்கனா ரணாவத் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அதனால் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் ஒரு பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்த நிலையில் இந்தியாவின் முதல் பிரதமர் குறித்து பேசியது சர்ச்சையானது. அவர் பேசியதாவது, “எனக்கு ஒரு விஷயம் தெளிவுபடுத்துங்கள். நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்?” என கேள்வி எழுப்பியிருந்தார்.  

1947ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பொறுப்பேற்றிருந்த நிலையில் சுபாஷ் சந்திரபோஸ் என கங்கனா கூறியிருந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி கங்கனாவை ஆதரித்து பா.ஜ.கவினரும் எதிராக காங்கிரஸை சார்ந்தவர்களும் மாறி மாறி கருத்து பகிர்ந்து வந்தனர். 

இந்த நிலையில் இந்த சர்சைக்கு ஆதாரமாக ஒரு பிரபல ஊடகத்தின் செய்தி குறிப்பை பகிர்ந்துள்ளார் கங்கனா. அந்த செய்தி குறிப்பில், “நேதாஜி என்று அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர், அக்டோபர் 21, 1943 அன்று சிங்கப்பூரில் ஆசாத் ஹிந்த் (சுதந்திர இந்தியா) என்ற அரசை உருவாக்கினார். இரண்டாம் உலகப் போரின் போது சுபாஷ் சந்திர போஸ் தன்னைப் பிரதமர், மாநிலத் தலைவர் மற்றும் போர் அமைச்சராக அறிவித்தார்.

மகளிர் அமைப்பின் பொறுப்பாளராக இருந்தவர் கேப்டன் டாக்டர் லட்சுமி சுவாமிநாதன். இந்திய தேசிய ராணுவத்திற்காக போராடும் பெண் வீரர்களின் படையான ராணி ஜான்சி படைப்பிரிவுக்கும் அவர் தலைமை தாங்கினார். ராணி ஜான்சி படைப்பிரிவு ஆசியாவிலேயே முதல் பெண்கள் மட்டும் போர் படைப்பிரிவு ஆகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.