Skip to main content

ஓ.டி.டி-யும் ஆபாசத் தளங்களும் ஒன்றுதான் - கங்கனா ரனாவத் காட்டம்!

Published on 24/10/2020 | Edited on 24/10/2020

 

kangana ranau t


                                                      
பிரபல  ஓ.டி.டி  நிறுவனமான ‘ஈரோஸ் நவ்’ நவராத்திரி பண்டிகையை ஒட்டி இரண்டு  விளம்பர போஸ்டர்களை வெளியிட்டது. அது ஆபாசமாகவும் மத உணவுர்களைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. சமூக வலைதளங்களில் ஈரோஸ் நவ் தளத்தைப் புறக்கணிக்கக் கூறி '#BoycottErosNow' என்ற ஹாஷ்டேகும் ட்ரெண்டானது.


இந்த நிலையில் பிரபல இந்தி நடிகையான கங்கனா ரனாவத், ஈரோஸ் நவ் உள்ளிட்ட ஓ.டி.டி தளங்களும் ஆபாசத் தளங்களாகவே இருப்பதாக விமர்சித்துள்ளார். ஈரோஸ் நவ் வெளியிட்ட போஸ்டர்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்த்துள்ள அவர், "நாம் சினிமாவை திரையரங்கில் குழுவாகப் பார்க்கும் முறையைப் பாதுகாக்க வேண்டும். தனிப்பட்ட சிலரின் பார்வைக்காக பாலியல் உள்ளடக்கத்தைச் சேர்ப்பதை விட பார்வையாளர்களை அதிக அளவில் கவர்ந்திழுப்பது மிகவும் கடினம். கலையை டிஜிட்டல் மயமாக்குவதில் இந்த மாதிரியான சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது. எல்லா ஓ.டி.டி தளங்களும் ஆபாசத் தளங்களாவே இருக்கின்றன.

 

சர்வதேச ஓ.டி.டி தளங்களில்கூட உள்ளடக்கம் பரபரப்பாக இருக்க வேண்டும் என்றால் அவற்றில் வெளிப்படையான பாலுறவுக் காட்சிகள், கொடூ'ரமான வன்முறை காட்சிகளை உருவாக்க வேண்டியுள்ளது. அடிப்படையில் பார்வையாளர்களின் பாலியல் பசியைத் துண்டுவது போன்ற உள்ளடக்கத்தை தவிர, வேறு உள்ளடக்கங்கள் நிர்வாகத்தினரால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. 

 

ஒருவர் உடனடித் திருப்திக்காக ஹெட்ஃபோன் மாட்டிக் கொண்டு தனியாகப் படம் பார்ப்பது அந்தத் தளங்களின் தவறல்ல. திரைப்படங்கள், ஒட்டுமொத்த குடும்பம், குழந்தைகள், அக்கம் பக்கத்தினருடன் பார்க்கும் ஒரு சமூக அனுபவமாக இருக்க வேண்டும்.

 

சமூகமாகச் சேர்ந்து பார்ப்பது நமது விழிப்புணர்வை அதிகரிக்கும். நாம் பார்க்கும் ஒரு விஷயத்தை இன்னொருவரும் பார்க்கிறார் எனும்போது, அவர்கள் நம்மைப் பற்றி எப்படி நினைக்கிறார்களோ அப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவோம். கவனமாக இருப்போம். நமது மூளைக்கும், உணர்ச்சிகளுக்கும் தரும் விஷயங்களில் தணிக்கை மிக முக்கியம். தணிக்கை என்பது நமது மனசாட்சியாகக் கூட இருக்கலாம்” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். 

 

cnc

 

சமூக வலைதளங்ககளிலும் பல்வேறு தரப்பிலும் எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து ஈரோஸ் நவ் நிறுவனம் அந்த போஸ்டர்களை நீக்கியதோடு மன்னிப்பும் கேட்டுள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "நாங்கள் எல்லா கலாச்சாரங்களையும் சமமாக மதிக்கிறோம். யாருடைய உணர்வையும் புண்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல. நாங்கள் அந்த போஸ்டர்களை நீக்கிவிட்டோம். மேலும், அது யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்திருந்தால், வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் கூறப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜூன் மாதத்தைக் குறிவைத்த கங்கனா ரணாவத்

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
kangana ranaut Emergency  release date update

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தற்போது 'எமர்ஜென்சி' படத்தை நடித்து இயக்கியும் உள்ளார். இப்படம் இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை கங்கனாவே தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அனுபம் கெர், சதீஷ் கௌசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
இப்படம் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக தெரிவித்து ஒரு வீடியோவை படக்குழு வெளியிட்டது. பின்பு இப்படம் தள்ளிப் போகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இப்படத்தின் புது ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி, வருகிற ஜூன் 14ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

Next Story

“பில்கிஸ் பானு வாழ்க்கையை ஆராய்ச்சி செய்து ஸ்கிரிப்ட் வைத்திருந்தேன்” - கங்கனா

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
kangana about bilkis bano biography

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் கோத்ரா கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரின் மூன்று வயது குழந்தையைக் கொலை செய்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். பின்பு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 11 குற்றவாளிகளும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்களை குஜராத் அரசாங்கம், சிறப்புக் குழுவின் பரிந்துரையின்படி நன்னடத்தை அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.

மேலும் அவர்கள் விடுதலையின்போது சிறை வாசலிலேயே மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தது, பெரும் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் 11 பேரும் தண்டனைக் காலம் முடிவதற்குள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த 8ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பு வந்தது. 

இந்த தீர்ப்பை தொடர்ந்து, பில்கிஸ் பானு வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க கங்கனா ரணாவத்திற்கு ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார். எக்ஸ் பக்கத்தில், கங்கனாவை டேக் செய்து பதிவிட்ட அந்த நபர், “பெண்கள் அதிகாரமடைவது பற்றிய உங்கள் ஆர்வம் ஊக்கமளிக்கிறது. அதனால் பில்கிஸ் பானு வாழ்கையை ஒரு அழுத்தமான திரைப்படமாக எடுக்க உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா?. இதை பில்கிஸ்பாவிற்காவோ, பெண்ணியத்திற்காகவோ அல்லது குறைந்த பட்சம் மனிதநேயத்திற்காகவாவது செய்வீர்களா” என குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். 

இதற்கு பதிலளித்த கங்கனா, “இந்தக் கதையை உருவாக்க வேண்டும் என்று ஆராய்ச்சி செய்து மூன்று வருடம் உழைத்து, ஸ்கிரிப்ட் தயார் செய்து வைத்திருந்தேன். ஆனால் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட சில நிறுவனங்கள், அரசியல் ரீதியான படங்களை தாங்கள் எடுப்பதில்லை என வரையறை வைத்துள்ளோம் என பதிலளித்துவிட்டனர். மேலும் ஜியோ சினிமாஸ், நான் பிஜேபியை ஆதரிப்பதாக கூறி என்னுடன் பணிபுரிய மாட்டோம் என கூறினர். ஜீ நிறுவனம் வேறொரு நிறுவனத்துடன் இணையப் போகிறது. எனக்கு வேறு என்ன வழி இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.