Advertisment

“மேனேஜரிடம் சரக்கு இருக்கிறதா என்று கேட்கின்றனர்” -பிரபல நடிகையை கிண்டலடித்த கங்கனா!

kangana ranaut

Advertisment

சுஷாந்த் மரணத்தை தொடர்ந்து பாலிவுட்டில் பல சர்ச்சைகள் உருவாகியுள்ளன. அதில் ஒன்றுதான் பிரபலங்களுக்குள் இருக்கும் போதை பொருள் பழக்கம். சி.பி.ஐ. மற்றும் என்.சி.பி. பல பிரபலங்களை தொடர்புகொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரோபாரதி மற்றும ரியாவின் சகோதரரை போதை பொருள் பயன்பாடு காரணமாக கைது செய்யப்பட்டு விசாரணை மெற்கொண்டுள்ளது போதை மருந்து தடுப்பு பிரிவு. மேலும், பலருடைய வாட்ஸ் அப் பதிவுகளை வைத்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை தீபிகாவுக்கும் அவரது மேலாளர் கரிஷ்மா பிரகாஷுக்கும் இடையே நடைபெற்ற வாட்ஸ் அப் உரையாடல் லீக்காகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த உரையாடலில் தீபிகா தனது மேலாளரிடம் போதை வஸ்துவை கேட்டிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில், தீபிகாவின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷை போதை மருந்து தடுப்புப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் கங்கனா ரணாவத் தீபிகாவை கிண்டல் செய்து ட்வீட் செய்துள்ளார். அதில், “எங்கே நான் சொல்வதை திரும்ப சொல்லுங்கள் பார்க்கலாம். போதை மருந்து பழக்கத்தின் பக்க விளைவாக மன அழுத்தம் வரும். உயர் சமூக, பணக்காரக் குழந்தைகள் என்றும், மிகவும் கண்ணியமானவர்கள், நன்றாக வளர்க்கப்பட்டவர்கள் என்றும் சொல்லிக் கொள்பவர்கள் தங்களின் மேலாளரிடம் சரக்கு இருக்கிறதா என்று கேட்கின்றனர்” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும், போதை மருந்து பழக்கம் இருக்கும் பாலிவுட் பிரபலங்களை புறக்கணியுங்கள் என்றும், தீபிகா படுகோன் என்றும் ஹேஷ்டேக் போட்டு கங்கனா குறிப்பிட்டுள்ளார்.

Kangana Ranaut
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe