Advertisment

வெவ்வேறு மதத்தினர் இடையே பகையைத் தூண்டுவதாக வழக்கு! - ரத்து செய்யக் கோரி கங்கனா மனு!

kangana

Advertisment

பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், வெவ்வேறு மதத்தினர் இடையே பகையைத் தூண்டும் வகையில் செயல்படுவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்முனாவர் அலி என்பவர் மும்பை பாந்திரா மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், நடிகை கங்கனாமீதும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு போலீஸுக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், பாந்த்ரா போலீஸார் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது மதம், இனம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு பிரிவினர் இடையே பகையைத் தூண்டுதல், வேண்டுமென்றே மத உணர்வைப் புண்படுத்துதல் உள்ளிட்டபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து கடந்த மாத இறுதியில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கங்கனா மற்றும் அவரது சகோதரிக்குப் போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், இதற்கு அவர்கள், தங்களது சொந்த ஊரான இமாசலப் பிரதேசத்தில், குடும்பத் திருமண வேலைகளில் இருப்பதால், தற்போதைக்கு ஆஜராக இயலாது என்று வக்கீல் மூலம் நீதிமன்றத்தில் பதிலளித்தனர். அதன்பிறகுகடந்த 9, 10-ஆம்தேதிகளில், ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

Advertisment

அதன் பிறகு, நடிகை கங்கனா வருகிற 23-ஆம்தேதியும், அவரது சகோதரி வருகிற 24-ஆம்தேதியும் பாந்த்ரா போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என மூன்றாவது முறையாகசம்மன்அனுப்பப்பட்ட நிலையில், இருவரும்மும்பைஉயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். அதில், தங்கள் மீதான வழக்கைரத்து செய்யவேண்டும்எனக் கோரியுள்ளனர். இந்த மனு, நாளை விசாரணைக்கு வரும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

bombay high court Kangana Ranaut
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe