Skip to main content

ரெண்டு பாட்டு விட்டாச்சு...இப்போ அடுத்த அப்டேட் ரெடி!

Published on 26/03/2019 | Edited on 26/03/2019
kanchana

 

சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்சன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படமான 'முனி 4 காஞ்சனா 3' படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மேலும் கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் ஏப்ரல் 19ம் தேதி 'முனி 4 காஞ்சனா 3' படம் உலகம் முழுக்க படத்தை வெளியிட உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி ஆகியோர் நாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் கோவை சரளா மற்றும் ஸ்ரீமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வரும் மார்ச் 28ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

காஞ்சனா ஹிந்தி ரீமேக்கில் அமிதாப்?

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

ராகவா லாரன்ஸ் தமிழ் திரையுலகில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி பின்னர் நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர் என்று பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். தற்போது இவர் நடித்து, இயக்கியுள்ள காஞ்சனா-3 படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் வெளியானவுடன் அவருடைய அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இந்த முறை தமிழ் சினிமாவில் இல்லை, பாலிவுட் சினிமாவில் அக்‌ஷய் குமாரை வைத்து இயக்குகிறார். 
 

amithabh bachan

 

 

காஞ்சனா 3 வெளியாகுவதற்கு முன்பே ராகவா லாரன்ஸ் ஹிந்தி சினிமாவிற்குள் நுழைகிறார் என்ற தகவல் வெளியானது தற்போது அது உண்மையாகியுள்ளது. மும்பையிலுள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அக்‌ஷய் குமாரை வைத்து பாடல் ஒன்றை படம் எடுத்து வருகிறார்.
 

காஞ்சனாவில் பேய்களுக்கு பயந்த ஹீரோ, பின் பேய்களுக்காக வில்லன்களை கொல்வார். அக்‌ஷய் குமார் நடிக்க இருக்கும் ஹிந்தி படத்தில், மூன்று பேய்களுக்கு பதிலாக ஒரு பேய் என தமிழ் படத்திலிருந்து சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள். 
 

தற்போது வெளியாகியுள்ள படத்தின் மூலம் வெற்றியை கண்டாலும், பழைய காஞ்சனா படங்களை போலதான் இந்த படமும் இருக்கிறது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். ஹிந்தியில் காஞ்சனா என்ற பெயரை மாற்றி லக்‌ஷ்மி என்று தலைப்பிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்‌ஷய்குமாருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். 
 

காஞ்சனா முதல் பாகத்தில் கௌரவ தோற்றத்தில் சரத்குமார் திருநங்கையாக நடித்திருப்பார். இந்த கதாபாத்திரத்தில் ஹிந்தியில் யார் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது கசிந்து வரும் தகவலில் அமிதாப் பச்சன் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.

 

 


 

Next Story

பாலிவுட்டில் கால் பதிக்கும் லாரன்ஸ்... படப்பிடிப்பு தொடங்கியது...

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

ராகவா லாரன்ஸ் தமிழ் திரையுலகில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி பின்னர் நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர் என்று பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். தற்போது இவர் நடித்து, இயக்கியுள்ள காஞ்சனா-3 படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் வெளியானவுடன் அவருடைய அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இந்த முறை தமிழ் சினிமாவில் இல்லை, பாலிவுட் சினிமாவில் அக்‌ஷய் குமாரை வைத்து இயக்குகிறார். 
 

kanchana

 

 

காஞ்சனா 3 வெளியாகுவதற்கு முன்பே ராகவா லாரன்ஸ் ஹிந்தி சினிமாவிற்குள் நுழைகிறார் என்ற தகவல் வெளியானது தற்போது அது உண்மையாகியுள்ளது. மும்பையிலுள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அக்‌ஷய் குமாரை வைத்து பாடல் ஒன்றை படம் எடுத்து வருகிறார்.
 

காஞ்சனாவில் பேய்களுக்கு பயந்த ஹீரோ, பின் பேய்களுக்காக வில்லன்களை கொல்வார். அக்‌ஷய் குமார் நடிக்க இருக்கும் ஹிந்தி படத்தில், மூன்று பேய்களுக்கு பதிலாக ஒரு பேய் என தமிழ் படத்திலிருந்து சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள். 
 

தற்போது வெளியாகியுள்ள படத்தின் மூலம் வெற்றியை கண்டாலும், பழைய காஞ்சனா படங்களை போலதான் இந்த படமும் இருக்கிறது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். ஹிந்தியில் காஞ்சனா என்ற பெயரை மாற்றி லக்‌ஷ்மி என்று தலைப்பிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.