கமல்ஹாசன் தற்போது ‘இந்தியன் 3’, ‘தக்லைஃப்’, ‘கல்கி 2898 ஏ.டி.’ மற்றும் இயக்குநர்லோகேஷ்கனகராஜின்சினிமாடிக்யுனிவர்ஸில்வரும்திரைப்படங்களைதற்போது கைவசம் வைத்துள்ளார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார். இதனிடையே தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலரியாலிட்டிஷோவான‘பிக்பாஸ்’நிகழ்ச்சியைதொகுத்து வழங்கி வந்தார்.
இந்நிலையில் ஆண்டுக்கு 100 நாள் நடக்கும் அந்தரியாலிட்டிஷோவில், தற்காலிகமாக விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த பயணத்திலிருந்து நான் ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். முந்தையசினிமாகமிட்மென்ட்காரணமாக வரவிருக்கும்பிக்பாஸ்சீசனைஎன்னால் தொகுத்து வழங்க முடியவில்லை. உங்கள் இல்லங்களில் உங்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. உங்கள் அன்பையும் பாசத்தையும் நீங்கள் எனக்குப் பொழிந்திருக்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு நான் என்றென்றும் நன்றியுணர்வுடன் இருப்பேன்.
பிக்பாஸ்தமிழ்நிகழ்ச்சியைசிறந்தரியாலிட்டிஷோக்களில்ஒன்றாகமாற்றுவதற்குப்போட்டியாளர்களின் உற்சாகமான மற்றும்உணர்ச்சிப்பூர்வமானஆதரவே அடிப்படை காரணம். தனிப்பட்ட முறையில் உங்கள்தொகுப்பாளராகஇருந்தது சிறப்பான ஒன்று. அங்கு நான் எனதுகற்றலைநேர்மையாகப்பகிர்ந்து கொண்டேன். இந்தகற்றல்அனுபவத்திற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். நாம் ஒன்றாக நேரம் செலவழித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் மனப்பூர்வமாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடைசியாக,பிக்பாஸ்நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு குழு உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரும்சீசன்இன்னொரு வெற்றியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளது.