kamalhaasan tweet about helicopter crash

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேகாட்டேரிபகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர்விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது.ஹெலிகாப்டரில் 14 பேர் பயணம் செய்த நிலையில், முப்படை தளபதி பிபின்ராவத் மற்றும் அவரது மனைவி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="c236ded0-d150-407d-935b-e31ce37483fa" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/ik-ad%20%281%29_16.jpg" />

Advertisment

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் ஹெலிகாப்டர் விபத்து அதிர்ச்சியளிக்கிறது எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது கடும் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.