Skip to main content

“இளையராஜாவை சுருக்கி விட்டார்கள்” - கமல்ஹாசன் ஆதங்கம்

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

kamalhaasan talk about album song and ilaiyaraaja

 

பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ‘ஓ பெண்ணே..’ என்ற ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் அவரே பாடியும், நடித்தும் இருக்கிறார். இப்பாடல் வெளியிட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பாடலை வெளியிட்டார். 

 

அதன் பிறகு பேசிய கமல்ஹாசன், “தேவி ஸ்ரீ பிரசாத் பல வெற்றிகளை கொடுத்த பிறகும், அதை எதையும் தலையில் ஏற்றிக்கொள்ளாமல், சின்ன பையன் போல ஒவ்வொரு முறையும் புதிது போல செயல்பட்டு வருகிறார். எம்.எஸ்.வியை சந்தித்து வந்த பிறகு சந்தோஷமாக, பதட்டமில்லாமல் இருக்கும். அதேபோன்று, இளையராஜாவை பார்க்க சென்றால் சத்தமாக பேசலாமா, வேண்டாமா என்று பயமாக இருக்கும். ஆனால் அவர் கொடுக்கும் இசைக்கு நாம் பேசாம இருந்து, கொடுக்கும் இசையை வாங்கி கொண்டு வந்தாலும் சந்தோஷமாகதான் இருக்கும்.

 

இவர் எப்படியோ, அப்படித்தான் நானும் இளையராஜாவுக்கும் மிகப்பெரிய ரசிகன். தேவி ஸ்ரீபிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்று பார்த்தால், அது அவருடைய ஸ்டுடியோவா இல்லை இளையராஜாவின் ஸ்டுடியோவா என்று சந்தேகமாக இருக்கும். ஏனென்றால் தேவி ஸ்ரீபிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவின் பெரிய புகைப்படத்தை மாட்டி வைத்திருப்பார். அப்படி நல்ல கலைஞர்களை பார்த்து காதல், மோகம் எல்லாம்  தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு உண்டு. அதை வெளிப்படுத்துவது தான் எங்கள் கடமை. அவருக்கு வெற்றி விரைவாக வந்திருக்க வேண்டும். எனக்கு என்னவோ தாமதமாக வந்திருக்கிறது என்று நீண்ட காலமாகவே ஒரு கோபம் இருகிறது. ஏனென்றால் ‘தசாவதாரம்’ படத்தில் இவரின் பின்னணி இசை மிகவும் அருமையாக இருக்கும்.

 

தேவி ஸ்ரீபிரசாத் எடுத்துள்ள இந்த முயற்சி எவ்வளவு முக்கியமானது என்று நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆரம்ப காலத்தில் சினிமாவை விட இசை ஆல்பம் பாடல்(தனிப்பாடல்) தான் பிரபலமாகி இருந்தன. ஆனால் சினிமா வந்த பிறகு அது அனைத்தையும் விழுங்கி விட்டது. அதன் பிறகு படத்தின் கதை என்னவோ, அதற்கு மட்டுமே படம் எடுக்கும் கட்டாயத்திற்கு தள்ளபட்டுள்ளார்கள். இசைக்கலைஞர்களை தனியாக விட்டால் அழகான பாடல்கள் உருவாகும். அப்படி ஒரு சூழ்நிலையில் சினிமாவில் அமையவில்லை என வருத்தமாக இருக்கிறது. இளையராஜா மாதிரி பெரிய கலைஞர் கூட சிறிய சதுரத்தில் சுருக்கி விட்டார்கள். அதையும் தாண்டி வெளியே சென்று இசையமைத்தால் வேண்டாம், எங்களுக்கு புரியவில்லை என்று சொல்வார்கள். அதனால் அவர்களுக்காக இசை கலைஞர்கள் குனிந்து நிற்கிறார்கள். அதை எல்லாம் களைந்துவிட்டு, அவர்களை அவர்களின் போக்கில் விட வேண்டும். 

 

இன்றைக்கு அமெரிக்காவில் பார்த்தீர்கள் என்றால் சினிமா நட்சத்திரங்களை விட இசை ஆல்பம் வெளியிடுபவர்கள் தான் பெரிய பணக்காரர்களாக இருக்கிறார்கள். தனியாக ஜெட் விமானம் வைத்து பறந்து கொண்டு இருக்கிறார்கள். அதனால்தான் எனது மகள் சுருதிஹாசன் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போது,  உலகில் அதிக படங்கள் எடுக்கும் நாடு இந்தியா, அதனால் இங்கு சினிமா கற்றுக்கொள்ளலாம். ஆனால் அமெரிக்காவில் இசையையும் கற்றுக்கொண்டு வர வேண்டும் என்று சொன்னேன். சினிமாவை விட பெரிதாக வளரக்கூடிய வாய்ப்பு வருங்காலத்தில் இசைக்கு இருக்கிறது என்று சொல்லி இசையை கற்க அனுப்பி வைத்தேன். சினிமாவை போல, இசை இன்னொரு தொழிலாக உருவாக வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உறையவைக்கும் காட்சிகள்” - பிரபலங்களின் பாராட்டில் ஆடுஜீவிதம் 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
maniratnam kamal praised aadujeevitham movie

மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனை படைத்த ‘ஆடுஜீவிதம்’ நாவலை, அதே தலைப்பில் மலையாளத்தில் படமாக்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து குடும்ப வறுமையை தீர்ப்பதற்காக அரேபிய தேசத்திற்கு செல்லும் நஜீப் என்ற நபர், அங்கு ஆடு மேய்க்கும் தொழிலாளியாகச் சேர்கிறார். அங்கு அவர் சந்திக்கும் அனுபவங்கள், வலியை விரிவாக இந்த நாவல் எடுத்துரைக்கிறது. 

இப்படத்தை பிளெஸ்ஸி இயக்க பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வருகின்ற 28 ஆம் தேதி இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதில் கமல்ஹாசன், மணிரத்னம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். திரையிடலுக்கு பின் பலரும் படக்குழுவை பாராட்டிய நிலையில் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர். 

கமல்ஹாசன் கூறுகையில், “இயக்குநர் பிளெஸ்ஸிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். உண்மையாகவே கடின உழைப்பை கொடுத்துள்ளார். கேமராமேனும் சிரமப்பட்டுள்ளார். படக்குழு இவ்வளவு தூரம் செல்வார்கள் என நினைக்கவில்லை. சிறந்த படம் என படமெடுப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். அதை மக்களும் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்” என்றார். மணிரத்னம், பேசுகையில், “உறையவைக்கும் காட்சிகள். ப்ரித்விராஜ் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். மொத்த படக்குழுவும் தான். எப்படி இப்படத்தை உருவாக்கினார்கள் என தெரியவில்லை. அவர்கள் மீது பொறாமை கொள்ளவில்லை. படக்குழுவிற்கு வாழ்த்துகள்” என்றார். 

Next Story

இளையராஜா வழக்கில் நீதிபதி விலகல்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
ilaiyaraaja song copywright issue case

இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்காக எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் அவரிடம் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் 2014ஆம் ஆண்டு, ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதென்றும், இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறதென்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் மீது இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இதையடுத்து எக்கோ நிறுவனம் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுள்ளோம். அதனடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த மனு இன்று நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்பிரமணியன் அறிவித்தார். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டுள்ளார்.