Skip to main content

"மருதநாயகம் தூக்கிலிடப்பட்ட அதே தேதியில் ராணி எலிசபெத் வந்தார்" - கமல் பகிர்ந்த சுவாரசிய தகவல்

Published on 09/09/2022 | Edited on 09/09/2022

 

kamal shared about queen elizabeth she come to marudhanayagam function

 

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96-வது வயதில் உயிரிழந்துள்ளார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பிலிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்த இரண்டாம் எலிசபெத், பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர். இதனிடையே ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப், கடந்த ஆண்டு ஏப்ரல் 9, 2021-ல் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் ராணி உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு உலகத் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

அந்த வகையில் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், "உலக அரசியல் மாறிவிட்டது என்பதை உணர்ந்த உலக தலைவர் ஒருவர் அவர். காலனி மனப்பான்மையிலிருந்து மாறிவிட்ட இங்கிலாந்தின் ஒரு பிரதிநிதியாகவும் அவர் இந்தியாவுக்கு வந்திருந்தார். நாங்கள் மாறியிருக்கிறோம். கிட்டத்தட்ட பழையதை மறப்போம் புதிய உலகை படைப்போம் என்ற எண்ணத்தில் தான் வந்திருந்தார்கள். மருதநாயகம் அவர்களை காலனி ஆட்சி வருவதற்கும் முன்னாள் தூக்கில் இடப்பட்ட அதே தேதியில் இங்கு வந்தார். நாங்கள் பேசிய வசனங்கள் எல்லாம் காலனி ஆட்சிக்கு எதிரான வசனங்கள். 

 

நாங்கள் இது தான் பேச போகிறோம் என்று தெரிந்தும் அவர் அங்கு வந்து அமர்ந்திருந்தார். அது அவருடைய மனப்பாங்கையும் அரசியல் மாறிவிட்டது உலகம் மாறிவிட்டது என்பதை உணர்ந்த ஒரு அரசியாக வராமல் ஒரு தாயாக வந்திருந்தார். அது எனக்கு பிடித்திருந்தது. பின்பு நானும் அங்கு சென்று பக்கிங்காம் மாளிகையில் அவரை சந்தித்தேன். புதிய உலகை அனுபவித்து முழுமையான வாழ்க்கையும் நீண்ட நாட்கள் அரியணையில் வாழ்ந்த உலகத் தலைவர்களில் ஒருவர், வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர் பார்க்காத உலக சரித்திரம் ஒன்றுமில்லை என்று சொல்லுமளவிற்கு அனைத்து மாற்றத்தையும் பார்த்து அனுபவித்து அதற்கான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் சொல்லி மறைந்திருக்கிறார். இங்கிலாந்து மக்களுக்கு அனுதாபங்கள்." என பேசியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்