தீவிர அரசியல் ஒரு புறம் இருந்தாலும் டிவி நிகழ்ச்சியிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். சென்ற ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அவர் இந்த ஆண்டும் பிக்பாஸ் சீசன் 2 வை தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்கிடையே மூன்றாண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட விஸ்வரூபம் 2 வை அடுத்த மாதம் வெளியிட இருக்கிறார் கமல். இதற்காக தான் தொகுத்து வழங்கப்போகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைத்து படத்திற்கு விளம்பரம் செய்தால் அது மக்களிடையே எளிதில் சேரும் என கமல் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து இந்தியன் 2 படப்பிடிப்பையும் தொடங்க திட்டமிட்டிருக்கிறார் கமல். இந்நிலையில் கமல் நடிப்பில் சமீபத்தில் உருவான சபாஷ் நாயுடு படப்பிடிப்பில் கமலுக்கு காலில் விபத்து ஏற்பட்டதால் படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்தினர். இதனையடுத்து நீண்ட நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறாமலேயே இருந்த நிலையில் தற்போது இப்படத்தினால் கமலின் இந்தியன் 2 படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கமல் நடிப்பில் ஏற்கனவே பாதி படப்பிடிப்பை முடித்த சபாஷ் நாயுடுவின் மீதி படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்தால் தான் அடுத்த படத்தை தொடங்க விடுவோம் என்று தயாரிப்பு தரப்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீதம் இருக்கும் சபாஷ் நாயுடு படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு இந்தியன் 2-ஐ தொடங்கவிருக்கிறது கமல் தரப்பு. இதையடுத்து வரும் ஆகஸ்டில் சபாஷ் நாயுடுவின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமல் படத்தால் கமலுக்கே ஏற்பட்ட சிக்கல்!
சார்ந்த செய்திகள்
Next Story
சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
'அந்த குடிகாரனை வெட்டி எறிந்துவிட்டேன்' - பிரபல நடிகை புலம்பல்
பிக்பாஸ் மற்றும் நாகினி தொடரில் நடித்து பிரபலமான ஹிந்தி நடிகை ஸ்வேதா திவாரி முதல் கணவர் ராஜா சவுத்திரியை விவாகரத்து செய்து பிரிந்த பிறகு நடிகர் அபினவ் கோலியை காதலித்து 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் தன் இரண்டாவது கணவருடனும் தற்போது ஸ்வேதாவிற்கு மோதல் ஏற்பட்டுள்ளது.
அபினவ் கோலி மது போதையில் தினமும் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக ஸ்வேதா திவாரி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் அவரை கைது செய்த நிலையில் நடிகை ஸ்வேதா திவாரி சமீபத்தில் அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசியபோது... ''கணவரை பிரிந்த பிறகு தற்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். எனது வாழ்க்கை ஒரு குடிகார விஷக்கிருமியிடம் சிக்கி இருந்தது. அந்த குடிகார விஷக்கிருமி என்னை கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்தது. இப்போது குடிகார விஷக்கிருமியை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எறிந்து விட்டேன். பெண்கள் தங்கள் பிரச்சினையை வெளியே சொல்ல பயப்படக்கூடாது'' என்றார்.