Skip to main content

“நான் இங்கு நிற்பதற்கு கமல்தான் காரணம்”- இயக்குனர் மகேந்திரனின் நினைவுகள்

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

ரஜினியை வைத்து  மிகப்பெரிய வெற்றி படங்களை இயக்கியவர். ரஜினியின் சில ஸ்டைல்கள் இவரிடம் இருந்துதான் வந்தது என்று  இயக்குனர் மஹேந்திரனை பற்றி சொல்வார்கள். இவருடைய பேச்சை எடுத்தாலே அதில் ரஜினிகாந்தின் பெயர்தான் அதிகமாக அடிபடும். ஆனால், ரஜினிக்கு போட்டியாக, தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாதவராக இருந்த கமலையும் இயக்குனர் மஹேந்திரனையும் இணைத்து அவ்வளவாக யாரும் பேசவே மாட்டார்கள். ஏனென்றால் மஹேந்திரன் இயக்கத்தில் கமல் நடித்ததில்லை. அதனால் பலருக்கு அவர்கள் இருவருடைய நட்பு தெரிந்திருக்க வாய்ப்பிருக்காது. கமலுக்கும் மஹேந்திரனுக்குமான நட்பு குறித்து மஹேந்திரனே ஒரு மேடையில் பேசியதை மஹேந்திரனின் மறைவையொட்டி நினைவுக்கொள்வோம். 
 

mahendran mahendran

 

 

“அவரால் சினிமாவுக்குள் வந்தார், இவரால் சினிமாவுக்குள் வந்தார் என சொன்னார்கள். ஆனால், நான் இங்கு நிற்பதற்கு காரணமே மகாகலைஞன் கமல் அவர்கள்தான். இது யாருக்கும் தெரியாது. இன்று இது அனைவருக்கும் தெரிந்தாகவேண்டும் என்றுதான் சொல்கிறேன். சினிமாவுக்குள் நான் வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நான் மற்றவர்களை போல சினிமாவுக்குள் விரும்பி வந்தவன் அல்ல, வலுக்கட்டாயமாக இழுத்துவரப்பட்டவன். சினிமாவைவிட்டு பலமுறை ஓடி இருக்கிறேன். அப்படிப்பட்ட என்னைதான் முள்ளும் மலரும் என்கிற என்னுடைய முதல் படத்தை இயக்க வைத்தார்கள்.
 

கமல் சாரை பற்றி சொல்லவில்லை என்றால் நான் பாவி ஆகிவிடுவேன். நான் முதல் படம் எடுப்பதற்கு முன்பு கமல் நடித்த படங்களுக்கு கதை வசனங்கள் எழுதியிருக்கிறேன். அவர் ஒரு மகா கலைஞன். அக்காலக் கட்டத்தில் நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளும்போது நல்ல சினிமாக்கள் பற்றின பரிமாற்றங்கள் ஏற்படும். அவர் பேசுவதெல்லாம் எனக்குள் போய்கொண்டே இருக்கும். எனக்கு தொடக்கத்திலிருந்தே தமிழ் சினிமாக்களில் வெறுப்பு இருந்தது. கடைசியில் நான் சினிமா துறையிலேயே நிரந்தரமாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முள்ளும் மலரும் என்று என்னுடைய முதல் படத்தை எனக்கு பிடித்ததை போல எடுக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், எனக்கு ஒரு நல்ல ஒளிப்பதிவாளர் கிடைக்கவே இல்லை. அப்போது எனக்கு பாலு மஹேந்திராவை அறிமுகம் செய்து வைத்தவர் கமல்ஹாசன்தான். இன்றுவரைக்கும் முள்ளும் மலரும் படத்தை பற்றியும், என்னை பற்றியும் பேசுகிறீர்கள். அதற்கு நான் ஒன்றுமே செய்யவில்லை. அதற்கு முழுகாரணம் மகாகலைஞன் கமல்தான்.
 

அந்த படம் எல்லாம் முழுதாக முடித்துவிட்டேன். படத்தின் முக்கிய ஆத்மாவாக இருந்த சீனை மட்டும் கடைசியாக எடுத்துக்கொள்ளலாம் என நினைத்திருந்தேன். அதற்குள் தயாரிப்பாளருக்கும் எனக்கும் சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டது. அதேபோல பாலு மஹேந்திராவுக்கும் அவருக்கும் விரோதமே இருந்தது. அதனால் அந்த காட்சியை எடுக்க பணம் தரமுடியாது என்று சொல்லிவிட்டார். ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றால்’ பாட்டிற்கு ஒரு ஆரம்பமாக இருந்த ஒரு சீன், அதை விட்டுவிட்டால் கண்டிப்பாக இந்த படமே மறக்கப்பட்டிருக்கும். நான் காணாமல் போயிருப்பேன். அந்த சமயத்தில்தான் கமலை சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன், அப்போது நான் உதவி என்றுகூட கேட்கவில்லை, ஆனால் அந்த காட்சியை எடுக்க கமல் அவராகவே முன்வந்து உதவி செய்தார். என் மேல் உள்ள நம்பிக்கையில் தயாரிப்பாளரிடம் சென்று எவ்வளவோ எனக்காக வாதாடினார். தயாரிப்பாளர் முடியவே முடியாது என்று மறுத்தார். கடைசியாக அந்த காட்சியை எடுக்க நான் பணம் தந்தால் எடுப்பீர்களா என்று கேட்டார் கமல். உடனடியாக கமல் அடுத்த நாளே அந்த காட்சியை எடுக்க பணம் கொடுத்து உதவினார். அவர் மட்டும் அன்றைக்கு உதவி செய்யவில்லை என்றால் நான் இன்று இல்லை. என்னுடைய படங்களும் இல்லை. என் வாழ்நாள் முடிகின்ற வரைக்கும் அந்த மாமனிதரை மறக்கவே மாட்டேன்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சினிமாவை நினைத்து பயந்துவிட்டேன்” - மகேந்திரன்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
mahendran movie press meet

முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’. இதில் சுந்தர், தசரதி, அதிரா ராஜ், ஶ்ரீக்கோ உதயா, முரளிதரன் சந்திரன், மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் மார்ச் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வினில் மகேந்திரன் பேசியதாவது, “நான் என்றும் ஹீரோ இல்லை உங்கள் வீட்டுப் பையன் தான். இந்த 30 வருடத்தில் எனக்கு எப்போதும் உங்கள் ஆதரவு தந்து கொண்டே இருக்கிறீர்கள் அதற்கு நன்றி. கொரோனா காலத்தில் சினிமாவை நினைத்து பயந்துவிட்டேன். என்ன செய்யப்போகிறேன் என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில் தான் இயக்குநர் பிரசாந்த் வந்தார். முதலில் டாக்குமெண்ட்ரி எடுக்கணும் என்றார், நான் தான் படமெடுக்கலாம் என சொன்னேன். சரி என்றார். அவர் அப்பா புரடியூசராக வந்தார். பல நண்பர்களும், அவர் குடும்பத்தினரும் இணைந்து தயாரிக்க முன்வந்தனர். பல கஷ்டங்களுக்கு பிறகு, இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இங்கிருக்கும் எல்லோருமே பணத்திற்காக வேலை செய்யவில்லை. இந்தப் படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இப்படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்” என்றார்.

இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் பேசியதாவது, “இது என் முதல் குழந்தை, என் முதல் படம். முதல் படம் எத்தனை முக்கியம் என அனைவருக்கும் தெரியும். பல கஷ்டங்களுக்கு பிறகு தான் இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வந்துள்ளோம். ஒரு கதை எழுதிவிட்டு காத்திருந்தபோது, மகேந்திரன் அண்ணாவைச் சந்தித்தேன் அங்கு தான் இப்படம் ஆரம்பித்தது. இப்படத்திற்காக பல தயாரிப்பாளர்களைச் சந்தித்தோம், ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை. அப்புறம் பல நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கலாம் என்றார்கள். பலரும் இணைந்து தான் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். மகேந்திரன் ஒரு நடிகராக இல்லாமல், தன் படமாக இன்று வரை தாங்கி வருகிறார். ஜி.எம். சுந்தர் அண்ணா மிக முக்கியமான பாத்திரம் செய்துள்ளார். கமல் சார் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் நடித்தவர் அவர். ஷூட்டிங்கில் அவரிடம் எனக்குத் தேவையானதை எப்படி வாங்குவது என்ற தயக்கம் இருந்தது, ஆனால் என்னிடம் மிக எளிமையாகப் பழகி, படத்திற்கு தேவையானதைத் தந்தார்” என்றார்.

Next Story

“மகிழ்ச்சி..” - அயோத்திக்கு புறப்பட்ட நடிகர் ரஜினி!

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
Actor Rajini left for Ayodhya!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம், உத்தரப்பிரதேசத்திற்கு புறப்பட்டார். அதேபோல், நடிகர் தனுஷும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் புறப்பட்டுள்ளார். இருவரும் ஒரே விமானத்தில் பயணிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ராமர் கோயில் அறக்கட்டளையின் அழைப்பை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் இன்று உத்தரப் பிரதேசத்திற்கு புறப்பட்டுள்ளார். முன்னதாக அவர் விமான நிலையத்திற்கு செல்வதற்குமுன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், ‘அழைப்பின் பேரில் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க செல்கிறீர்கள் எப்படி உணர்கிறீர்கள்’ என கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், “மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று பதில் அளித்துவிட்டு சென்றார்.