Skip to main content

பிரபல நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசன் உருவாக்கப்போகும் வெப் தொடர்!

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

பனிஜா ஏஷியா என்ற வெப் தொடர் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை தயாரிக்கும் நிறுவனம் கமல்ஹாசனை வைத்து வெப் தொடர் ஒன்றை தயாரிக்க உள்ளது. இந்நிறுவனம்தான் சிஎஸ்கே அணி குறித்த வெப் தொடரான ரோர் ஆஃப் தி லயன், டிவி நடன நிகழ்ச்சியான நச் பாலியே உள்ளிட்டவற்றை தயாரித்தது. 
 

kamalhassan

 

 

தற்போது இந்நிறுவனம் டர்மரிக் மீடியா என்று நிறுவனத்துடன் இணைந்து பிராந்திய மொழிகளில் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குகிறது. இவர்களுடன் இணைந்துதான் நடிகர் கமல்ஹாசன் வெப் சீரிஸை தயாரிக்க உள்ளார். விரைவில் இதுகுறித்தான முழு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய முயற்சி குறித்து பேசியுள்ள கமல்ஹாசன்,  “நிகழ்ச்சி உருவாக்கும் மற்றும் தயாரிப்பின் நாடி தெரிந்தவர்களுடன் இணைந்து கூட்டாகத் தயாரிக்க வேண்டும் என்று விரும்பினோம். அதனால் பனிஜாய் ஏஷியா நிறுவனத்தின் தீபக்குடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தத் துறையில் அவருக்கிருந்த விரிவான அறிவைக் கொண்டு பிராந்திய மொழியில் இந்தியாவில் பனிஜாய் ஏஷியாவுடன் இணைந்து நிகழ்ச்சி உருவாக்குவதில் இருக்கும் சாத்தியங்கள் எங்களுக்குத் தெரிந்தன. இதை நிஜமாக்குவதில் அவரது துறையைப் பற்றிய புரிதல் உதவியிருக்கிறது. அவர்களுடன் இணைந்து பல்வேறு மொழிகளில், தளங்களில் புரட்சிகரமான விஷயங்களை உருவாக்குவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்; குழு அமைத்த கமல்ஹாசன்

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Parliamentary elections approaching; Kamal Haasan announce Team

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு மற்றும் கூட்டணி தொகுதிப் பங்கீடு ஆகிய விஷயங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழுவை கட்சித் தலைமை அறிவித்துள்ளது.  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஒருங்கிணைப்புக் குழு குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். ஏ.ஜி. மௌரியா, தங்கவேலு, அருணாச்சலம் ஆகியோர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான செயல் திட்டங்களை உருவாக்கவும், செயல்படுத்தவும் இவர்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Next Story

'அது ஒரு கருவிதான்'-பணம் குறித்து கமல்ஹாசன் பேச்சு

Published on 24/09/2023 | Edited on 24/09/2023

 

'It's a tool' - Kamal Haasan talks about money

 

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பணம் குறித்து உரையாற்றிய பேச்சு இணையத்தில்  வைரலாகி வருகிறது.

 

கமல்ஹாசன் பேசியதாவது, ''என்னோட அனுபவத்தில் சொல்கிறேன். மூச்சு இல்லாமல் 40 செகண்ட் அல்லது ஒரு நிமிடம் தாங்குவோம். தண்ணி இல்லாமல் ஆறு ஏலு நாட்கள் தாங்குவோம். சாப்பாடு இல்லாமல் பத்து நாட்கள் தாங்குவோம். அதைவிட பணம் எப்படி முக்கியமாக இருக்க முடியும். இதையெல்லாம் வாங்குவதற்கு அது ஒரு கருவி. ஆண்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் தாடி வைக்க வேண்டுமா அல்லது மழிக்க வேண்டுமா என்பது உங்களுடைய இஷ்டம். அதை நீங்கள் பிளேடு கிட்டப் போய் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அதுவெறும் கருவி தான். அதுவா சொல்லும் வேணாம் தாடிய கொஞ்சம் நீளமாகவே வச்சுக்கோ அல்லது முழுவதும் சவரம் பண்ணிக்க, இல்ல மீசை மட்டும் வச்சுக்க என பிளேடுக்கு சொல்லத் தெரியாது. அவ்வளவுதான் பணமும். அது பேசாமடந்தை.

 

நான் சினிமா நடிக்க வந்த பொழுது இப்படி எல்லாம் நடிக்க முடியுமா என்று பலர் இருந்தனர். முக்கியமாக என் ஏரிக்கரையில் தெரிந்த முதல் சூரியன் சிவாஜி. அதன் பிறகு தான் இப்படி ஒரு கேலக்ஸி இருக்கிறது என்றே தெரியும். அதற்கு காரணம் எனக்கு கோனார் நோட்ஸ் கொடுத்து பொழிப்புரை சொல்லி அனுப்பி வைத்தவர் சிவாஜி சார் தான். நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்வதெல்லாம் இன்னொரு சிவாஜி ஆகவேண்டும் என நான் நினைக்கவே இல்லை. இன்னொரு சிவாஜி வருவாரா என்று கூட கேட்கவில்லை'' என்றார்.