Kamal hassan

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர்

நடிப்பில் உருவான 'விக்ரம்' திரைப்படம், கடந்த 3ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், கமல்ஹாசனும்லோகேஷ் கனகராஜும் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அந்த நிகழ்வில் மக்களிடம் படங்களைக் கொண்டு சேர்த்ததற்காக ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்த இருவரும், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தனர்.

விக்ரம் பட வெற்றி கூடுதல் மகிழ்ச்சியைகொடுக்க என்ன காரணம் என்ற கேள்விக்குப் பதிலளித்த கமல்ஹாசன், “எப்போதுமே மகிழ்ச்சியை ஓரளவிற்கு நான் வெளிப்படுத்துவேன். இந்த வாரம் விக்ரம் வெற்றியை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். அடுத்த வாரம் பார்த்தீர்கள் என்றால் வேறு விஷயம் பற்றிப் பேசுங்கள் என்பேன். அபூர்வ சகோதரர்கள் படத்தின் போதும் இதே மாதிரி நான் சந்தோசமாக இருந்தேன். அந்தப் படம் ஒரே அடியாக நாடு முழுவதும் செல்லாமல் ஆறு மாதங்கள் கழித்து இந்திக்குச் சென்றது. அங்கும் பெரிய வெற்றிபெற்றது. அவ்வை சண்முகிக்கும் இது நடந்தது. விக்ரம் படத்திற்கு ஒரேயடியாக நாடு தழுவிய பாராட்டு கிடைத்ததில் கூடுதல் சந்தோசம். அதை அனுபவிக்கவிடுங்களேன்” எனக் கிண்டலாகத் தெரிவித்தார். கமல்ஹாசனின் இந்தப் பதிலால் அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.