Skip to main content

'கமல்ஹாசன் சந்திக்காத பிரச்சனைகளே இல்லை' - சுஹாசினி 

Published on 04/08/2018 | Edited on 04/08/2018

 

maniyarfamily

 

suhasini

 

 

 

மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பூமராங்'. 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் இசை தகட்டினை கலைப்புலி எஸ் தாணு, சத்யஜோதி தியாகராஜன் வெளியிட, சுஹாசினி மணிரத்னம் மற்றும் சமுத்திரகனி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகை சுஹாசினி பேசும்போது..... 

 

 

 

"மூன்றாம் பிறை படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க நான் பெங்களூர் போனபோது, சத்யஜோதி தியாகராஜன் சாரை பார்த்த நினைவுகள் இந்த நேரத்தில், இந்த மேடையில் ஞாபகம் வருகிறது.திட்டமிட்ட படி, நேர்த்தியான முறையில் படப்பிடிப்பு நடக்கும். மெட்ராஸ் டாக்கீஸின் செல்லப்பிள்ளை கண்ணன். எங்கள் கம்பெனியில் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் பங்கு தான் அதிகம் இருக்கும். அவருக்கு நகைச்சுவை உணர்வும் ரொம்ப அதிகம். நீங்கள் உங்களுக்கு பிடித்த இயக்குனராக இருக்க வேண்டும். என் வாழ்க்கையில் முதல் 25 ஆண்டுகள் கமல் உடனும், அடுத்த 30 ஆண்டுகள் மணிரத்னம் உடனும் கழித்திருக்கிறேன். அவர்கள் சந்திக்காத பிரச்சினைகளே இல்லை. இன்றும் கமல் விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்து வருகிறார். அதர்வா உங்கள் திறமைகள் உங்களுக்கு தெரியும், யாருக்கும் உங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை, படத்தின் ட்ரைலரை பார்த்த பிறகு கூட, மணிரத்னத்துக்கு இது என்ன மாதிரி படம் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவே படத்தின் முதல் வெற்றி" என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகர் அதர்வா மீது மோசடி புகார்

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

நடிகர் அதர்வா சொந்த தயாரிப்பில் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ''செம்ம போத ஆகாத'' இந்த படத்தின் உரிமத்தை மதியழகன் என்பவருக்கு 4.5 கோடிக்கு விற்பனை செய்தார் அதர்வா. படம் வெளிவருவதற்கு முன்பாக முன்பணமாக 3.5 கோடி ரூபாயை நடிகர் அதர்வா பெற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த படம் திரைக்கு வந்த அன்று மற்றொருவர் அதர்வா மீது மோசடி புகார் கொடுத்ததால் அந்த திரைப்படத்தின் முதல் நாள், முதல் இரண்டு காட்சி தடையானது. இதனால் படத்தின் உரிமம் பெற்ற மதியழகன் நஷ்டம் அடைந்ததால் நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார்.

 

complains about Actor Atharva


இதில் தலையிட்ட நடிகர் விஷால் இருதரப்பிலும் சமாதானத்தை ஏற்படுத்தி அதர்வாவிற்கு சேர வேண்டிய 1 கோடி பணத்தில் மீதமுள்ள 45 லட்ச ரூபாயை மதியழகனிடம் இருந்து பெற்றுதந்து அதேபோல இந்த படத்தில் நஷ்டம் ஏற்பட்ட மதியழகனுக்கு சம்பளம் இல்லாமல் ஒரு படம் நடித்து தருவதாக அப்போது மத்தியஸம்  செய்யப்பட்டு அக்கிரிமெண்ட் போடப்பட்டது. அதன்பேரில் இன்றுவரை அதர்வா தனக்கு சொன்னபடி படத்தில் நடித்து கொடுக்க மறுத்து வருவதாகவும், தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு நஷ்டஈடும் வழங்க வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார் மதியழகன்.

 

Next Story

பூமராங் படத்தில் விட்டதை இந்த படத்தில் பிடிக்கும் முனைப்பில் அதர்வா

Published on 02/08/2019 | Edited on 02/08/2019

எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸுடன் இணைந்து மசாலா பிக்ஸ் தயாரித்து, அதர்வா முரளி - அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது  துவங்கியுள்ளது. சென்னையில் தொடர்ந்து 15 நாட்கள் நடக்கும் படப்பிடிப்பு பிறகு வெளிநாடுகளில் படமாக்கபட உள்ளது. பூமராங்க படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக அதர்வாவுடன் இணைந்துள்ள இயக்குனர் கண்ணன் இப்படம் குறித்து பேசும்போது.... 

 

atharva

 

 

"அதர்வா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார்கள், இந்த ஜோடி திரையில் நிறைய புத்துணர்ச்சியை தரும். அவர்கள் இருவரும் நிச்சயமாக பார்வையாளர்களை அவர்களின் உணர்வு வெளிப்பாடு மற்றும் அழகான செய்கைகளால் ரசிக்க வைப்பார்கள். ரொமான்டிக் படங்களுக்கு என்றே எப்போதும் ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்கள் உள்ளனர். இந்த ஆண்டின் கடைசி கட்டத்தில் வெளியிடப்படவுள்ள இந்த பெயரிடப்படாத படம் அனைவராலும் ரசிக்கப்படும், குறிப்பாக குடும்பங்கள் இந்த படத்தை ரசிப்பார்கள்" என்றார். கண்ணன் அதர்வா கூட்டணியில் உருவான பூமராங் படம் போதிய வரவேற்பு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.