Skip to main content

வாழ்த்து சொன்ன கமல்! நன்றி சொன்ன ஷங்கர்! வதந்திக்கு முற்றுப்புள்ளி!

Published on 18/08/2021 | Edited on 18/08/2021

 

hththjrft

 

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கரோனா பரவல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் தடைப்பட்டது. தற்போது அரசியல் பணிகளில் கவனம் செலுத்திவரும் கமல்ஹாசன், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' படத்தில் நடித்துவருகிறார். இயக்குநர் ஷங்கரும் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தையும், ரன்வீர் சிங்குடன் ‘அந்நியன்’ ஹிந்தி ரீமேக்கையும் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால், 'இந்தியன் 2' படம் மீண்டும் தொடங்கப்படுமா அல்லது கைவிடப்படுமா என்பது குறித்து பல்வேறு யூகங்கள் சமூகவலைதளங்களில் பரவிவருகின்றன. இதற்கிடையே, ‘இந்தியன் 2’ படத்தை முடித்துக் கொடுக்காமல் இயக்குநர் ஷங்கர் வேறு எந்த படத்தையும் இயக்கக்கூடாது என லைகா தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

 

bfdhdrhd

 

இந்த வழக்கு தற்போது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கு தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் இதுவரை வாய் திறக்காததால் இவருக்கும் ஷங்கருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நேற்று (17.08.2021), இயக்குநர் ஷங்கர் தனது 58வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவருக்குப் பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில் நடிகர் கமல்ஹாசன், "சினிமா என்பது விழித்துக்கொண்டே காணும் கனவு. ரசிகர்களுக்காக பிரம்மாண்டமான கனவுகளைத் திரையில் தந்த இயக்குனர் ஷங்கருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என இயக்குநர் ஷங்கருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த ஷங்கர், "மிக்க மகிழ்ச்சி! நன்றி சார்" என ட்வீட் செய்துள்ளார். இதன்மூலம் ஷங்கருக்கும் கமலுக்கும் உள்ள நட்பு தொடர்வது உறுதியாகியுள்ளது. இதைக் கண்ட ரசிகர்கள் மீண்டும் எப்போது 'இந்தியன் 2' படத்தை ஆரம்பிப்பீர்கள் என ஷங்கரிடம் கேள்வி எழுப்பிவருகின்றனர்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் - ஷங்கர் மகள் வரவேற்பு விழாவில் ஒன்றுகூடிய பிரபலங்கள்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் முதல் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். மேலும் திருமண வரவேற்பு நிகழ்வில் ஏ.ஆர் ரஹ்மான், மோகன்லால், சிரஞ்சீவி, ராம் சரண், வெற்றிமாறன், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ், அட்லீ, ரன்வீர் சிங், நெல்சன், அனிருத், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

பிரபலங்களின் வாழ்த்தில் களைகட்டிய ஷங்கர் மகள் திருமணம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.