விபுல்அம்ருத்லால்ஷா தயாரிப்பில்சுதிப்தோசென்இயக்கத்தில்அதாசர்மா, சித்திஇட்னானிஉள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தி கேரளாஸ்டோரி. இப்படத்தின்டீசர்வெளியானதுமுதலே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாகப் பல தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்ததோடு, கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் வழக்கின் விசாரணையின் போதுபடத்திற்குக்கேரள உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.
பின்பு பல எதிர்ப்புகளைத்தாண்டி கடந்த 5 ஆம்தேதி இப்படம் வெளியானது. கலவையான விமர்சனமேரசிகர்கள் மத்தியில் இருந்தது. இதையடுத்து தமிழகத்தில் இந்த படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள்அதிகரித்து வர மல்டிப்ளெக்ஸ்திரையரங்கங்கள்தானாக முன்வந்து தி கேரளஸ்டோரி படத்தை திரையிடமாட்டோம்என அறிவித்தன. மேற்கு வங்கத்திலும் இப்படத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. இதை எதிர்த்து படக்குழு தரப்பு நீதிமன்றம் சென்ற நிலையில், இந்த விவகாரம்தொடர்பாக தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகள் விளக்கமளிக்க வேண்டிநோட்டீஸ் அனுப்பியது. பின்பு தமிழ்நாடு அரசு சார்பில்மக்களிடம் வரவேற்பு இல்லாத காரணத்தால் திரையரங்குகளே தாங்களாக முன்வந்து படத்தை திரையிடுவதை நிறுத்தியுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்துதமிழ்நாடு அரசு மறைமுகமாகத்தடை செய்யக்கூடாது என உத்தரவிட்டுபடத்தை திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கிடநீதிமன்றம் வலியுறுத்தியது. மேலும்மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்ட தடையையும்நீக்கியது.இப்படி படம்வெளியாவதற்குமுன்பு, பின்பு ஏகப்பட்டசர்ச்சைகளைக்கிளப்பிய இந்த படத்தை பாஜக மற்றும் வலது சாரிகள் தொடர்ந்து ஆதரித்த வண்ணம் உள்ளனர். இப்படம் தற்போது வரை ரூ.200 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படம் குறித்து பல திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன்,"நான் முன்பு கூறியது போல பிரச்சாரப் படங்களுக்கு எதிரானவன் நான். ஏனென்றால் படத்தில் மட்டும் இது உண்மை கதை என குறிப்பிட்டால் போதாது. நிஜமாகவே அந்த கதை உண்மையாகஇருக்க வேண்டும். இப்படத்தில் உண்மை இல்லை" என்றார். கமல்ஹாசன் தற்போது சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) விழாவில் பங்கேற்பதற்காகஅபுதாபி சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த போதுசெய்தியாளர்களின் கேள்விக்கு இந்த பதிலைஅளித்துள்ளார். அந்த விருது நிகழ்வில்கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.