Skip to main content

கமல் 60 சிறப்பு அழைப்பிதழை பெற்ற சூப்பர் ஸ்டார்... வைரலாகும் புகைப்படம்... 

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

நவம்பர் 7ஆம் தேதி நடிகர் கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள். அத்துடன் அவர் திரைத்துறைக்கு வந்து 60 வருடங்கள் நிறைவாகிறது. கமல்ஹாசன் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக 1960ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா என்னும் படத்தில் நடித்தார். 
 

rajni kamal

 

 

அவரது பிறந்தநாளானா நவம் 7ஆம் தேதி , கமலின் தந்தை டி.சீனிவாசனின் நினைவு நாளும் கூட, இதனால் அவருடைய சொந்த ஊரான பரமக்குடியில் கமலின் தந்தையின் உருவ சிலையை கமல் தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் திறந்து வைத்தார். அடுத்த நாளான 8 ஆம் தேதி காலை 9.30க்கு சென்னையில் உள்ள ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் கமல்ஹாசனின் திரையுலக குருவான இயக்குநர் கே.பாலசந்தரின் சிலையை நடிகர் ரஜினியுடன் திறந்து வைத்தார். இதில் பாலசந்தர் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளை அடுத்து நவம்பர் 9ஆம் தேதி கமலின் 60 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக இசைஞானி இளையராஜாவின் கலை நிகழ்ச்சி மற்றும் பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக இருந்தன. ஆனால், வானிலை காரணமாக இந்த நிகழ்ச்சி வருகிற 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. நவம்பர் 17 அன்று சென்னை எஸ்.டி.ஏ.டி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நட்சத்திரக் கலைவிழாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் உட்சநட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், கமல், விக்ரம், சூர்யா என பலர் கலந்துகொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் முக்கிய நடிகர்களுக்கு கமலின் கெட்டப்புகளுடன் இருப்பதுபோல பெரிய புகைப்படம் வழங்கப்பட்டு, கமல் 60 நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு வருகிறார்கள் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.  தற்போது இந்த புகைப்படங்கள் மணிரத்னம், விஜய் சேதுபதி, ரஜினிகாந்திற்கும் வழங்கப்பட்டது சமூக வலைதளத்தில் பரவியது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘தி.மு.க. கூட்டணியில் இணைந்தது ஏன்?’ - கமல்ஹாசன் விளக்கம்

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Why joined to the DMK alliance KamalHaasan explained

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தி.மு.க. கூட்டணி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான 40 மக்களவைத் தொகுதிகளுக்கான தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அதன்படி தி.மு.க. 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி புதுச்சேரியின் 1 ஒரு மக்களவை தொகுதி உட்பட 10  தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும், வி.சி.க. 2 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, கொ.ம.தே.க., ம.தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகளும் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளன. அதே சமயம் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தி.மு.க. கூட்டணியில் இணைந்தது குறித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஒரு நிமிடம் 11 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கூட்டணி நிலை என்பது ஒரு அவசர நிலை. இது தமிழ்நாட்டிற்கும், தேசத்திற்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும். எதிர்வாத சக்திகளுக்கு கை கூடி விடக்கூடாது என்பதற்கான முடிவு இது. இந்த அரசியலை மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பை உங்களுக்கு அளித்திருக்கிறது சரித்திரம். எந்த கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், இந்த நேரத்தில் அனைவருமே என்னுடைய சகோதரர்கள் தான். தேசத்திற்காக நாமெல்லாம் ஒரே மேடையில் அமர வேண்டும். அதுதான் என்னுடைய அரசியல்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“மகிழ்ச்சி..” - அயோத்திக்கு புறப்பட்ட நடிகர் ரஜினி!

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
Actor Rajini left for Ayodhya!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம், உத்தரப்பிரதேசத்திற்கு புறப்பட்டார். அதேபோல், நடிகர் தனுஷும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் புறப்பட்டுள்ளார். இருவரும் ஒரே விமானத்தில் பயணிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ராமர் கோயில் அறக்கட்டளையின் அழைப்பை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் இன்று உத்தரப் பிரதேசத்திற்கு புறப்பட்டுள்ளார். முன்னதாக அவர் விமான நிலையத்திற்கு செல்வதற்குமுன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், ‘அழைப்பின் பேரில் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க செல்கிறீர்கள் எப்படி உணர்கிறீர்கள்’ என கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், “மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று பதில் அளித்துவிட்டு சென்றார்.