Skip to main content

“கதை கேட்டவுடன் அப்பாவின் ஞாபகம் வந்தது” - காளி வெங்கட்

Published on 28/05/2025 | Edited on 28/05/2025
kali venkat speech at Madras Matinee Press Meet

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்   'மெட்ராஸ் மேட்னி'. இப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இப்படத்தை வழங்குகிறது. 

இந்நிகழ்வினில் காளி வெங்கட் பேசுகையில், “அபிஷேக் மூலம் தான் இயக்குநரைச் சந்தித்தேன், வீட்டுக்கு கூப்பிட்டு கதை சொன்னார், அதுவே எனக்குப் புதிதாக இருந்தது, இந்தக்கதை சொன்னவுடனே எனக்குப் புரிந்துவிட்டது. எனக்கு என் அப்பாவின் ஞாபகம் வந்தது. எல்லோர் வாழ்க்கையிலும் இதை உணர்ந்திருப்பீர்கள்.

ஒரு கட்டத்தில் எல்லா அப்பாவும் தன் பிள்ளைகள் தன்னிடம் இருந்து பிரிந்து செல்வதை உணர்வார்கள், நான் அதிகம் சொல்லவில்லை படம் பார்க்கும் போது நீங்களே உணர்வீர்கள். ஆனந்த் கேமரா ஒர்க் மிகச்சிறப்பாக இருந்தது.ஷெல்லி உடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது, மிகச் சிறப்பாக நடித்துள்ளார். விஷ்வா, ரோஷினி எல்லோருக்கும் நன்றி”என்றுள்ளார். 

சார்ந்த செய்திகள்