Skip to main content

மாரத்தான் போட்டிக்கு அழைக்கும் காஜல் அகர்வால்

Published on 31/12/2018 | Edited on 31/12/2018
kajal agarwal

 

 

'குயீன்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாரீஸ் பாரீஸ்' படத்தை அடுத்து தற்போது 'இந்தியன் 2' படத்தில் நடிப்பதற்காக தயாராகி வரும் நடிகை காஜல் அகர்வால் நடிப்புடன் மாரத்தான் போட்டிகளிலும் ஆர்வம்காட்டி வருகிறார். கடந்த ஆண்டு ‘அமைதியை யோசி’ என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட அவர் டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் 16வது முறையாக வரும் ஜனவரி 20ஆம் தேதி மும்பையில் நடத்தும் மாரத்தானில் அனைவரும் கலந்துகொள்ள காஜல் அகர்வால் அழைப்பு ட்விட்டரில் விடுத்துள்ளார். அதில்.... "இந்த முறை நான் பழங்குடியின விளையாட்டுத்துறை முன்னேற்றத்துக்காக 2019 டாடா மும்பை மாரத்தானில் கலந்துகொள்கிறேன். அரக்குவில் உள்ள பழங்குடியினருக்கு அவர்களது விளையாட்டுத்துறை உள்கட்டமைப்பு மேம்படவும், திறமை வாய்ந்த பழங்குடியின விளையாட்டு ஆளுமைகளுக்குச் சக்தி வாய்ந்த உணவு கிடைத்திடவும் வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்