Skip to main content

கைதி ஹிந்தி ரீமேக்கில் யார் ஹீரோ தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published on 28/02/2020 | Edited on 28/02/2020

கடந்த தீபாவளி பண்டிகைக்கு கார்த்தி நடிப்பில் உருவாகி வெளியான படம் கைதி. இந்த படத்தை மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். ஹீரோயின் இல்லாத இந்த படத்தில் கார்த்தியுடன் நரேன், அர்ஜுன், ஜார்ஜ் மரியான், தீனா, ரமணா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
 

ajay devgan

 

 

தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான ஆக்‌ஷன் கதை களத்தில், எந்தவொரு பாடல்களும் இல்லாமல் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்தார். சாம் சி எஸ் இசையமைக்க, பிலோமின்ராஜ் படத்தொகுப்பு செய்தார். எஸ்.ஆர். பிரபு இப்படத்தை தயாரித்து வெளியிட்டார்.

இந்த படம் விஜய்யின் பிகில் படத்துடன் ரிலீஸாகி, 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில், ‘கைதி’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனமே படத்தைத் தயாரிக்கிறது. இதன்மூலம் முதன்முறையாக இந்தியில் கால் பதிக்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.

இந்நிலையில், கார்த்திக் நடித்த கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிப்பாரா, ஹ்ருத்திக் ரோஷன் நடிப்பாரா என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பேச்சு வந்த நிலையில் அஜய்தேவ்கன் அக்கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூஜையுடன் பணிகளைத் தொடங்கிய சங்க நிர்வாகிகள்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nadigar sangam building works start again with pooja

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்த பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

nadigar sangam building works start again with pooja

இந்த நிலையில் இன்று சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் தொடங்கியது. பூஜை நடத்தி பணிகளை தொடங்கினார்கள் சங்க நிர்வாகிகள். இந்த பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.