Skip to main content

“அணுகினால் அரசு உதவி செய்யும்”- தர்பார் நஷ்டம் குறித்துஅமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

Published on 03/02/2020 | Edited on 03/02/2020

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி ரஜினி நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம் தர்பார். ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்க மேலும் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திஅ லைகா நிறுவனம் தயாரித்தது.
 

kadambur raju

 

 

இந்த படம் வெளியான நாளில் இருந்து கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. முதல் ஒரு வாரம் நன்றாக ஓடிய படம், போக போக கூட்டம் குறைந்து வசூலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதுதொடர்பாக கடந்த ஜனவரி 30ஆம் தேதி ரஜினியைச் சந்திக்க நிநியோகஸ்தர்கள் முயற்சி செய்தனர். ஆனால், அது நடக்கவில்லை. பின்னர், ரஜினியே அழைப்பார் என்று பொறுமையாக காத்துள்ளனர் விநியோகஸ்தர்கள். அப்போதும் ரஜினி தரப்பிலிருந்து அழைப்பு வரவில்லை என்பதால் இன்று போயஸ் கார்டனிலுள்ள ரஜினி வீட்டுக்குச் சென்றனர். ஆனால், விநியோகஸ்தர்களை உள்ளே விடாமல் போலீஸ்காரர்கள் தடுத்துள்ளனர். 

இந்நிலையில், திரைத்துறை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டியளித்தார். அப்போது தர்பார் நஷ்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், “நஷ்டம் தொடர்பாக இதுவரை யாரும் எங்களிடம் வரவில்லை. சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு லைகா நிறுவனம் சார்பில் வந்தனர். அவர்கள் கேட்டபடி சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. நஷ்டம் தொடர்பாக விநியோகஸ்தர்கள் யாரும் அணுகவில்லை.

நான் ஊடகங்களில் பார்த்துதான் இந்தச் செய்தியை அறிந்து கொண்டேன். அதேசமயம், தர்பார் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருவதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறியதையும் ஊடகங்களில் பார்த்தேன். தயாரிப்பாளர்கள் சங்கம் என ஒன்று இருக்கிறது. அது சரியாகச் செயல்படாததால், அதற்கு தனி நிர்வாகி நியமிக்கப்பட்டிருக்கிறார். முறைப்படி விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குச் சென்றால், அவர்களுக்கு நாங்கள் வழிகாட்டுவோம். அங்கு சென்று தீர்வு காணக்கூடிய நிலையை அரசு ஏற்படுத்தும், அவர்களுக்கு உதவும்” எனப் பதில் அளித்துள்ளார் கடம்பூர் ராஜு.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஆள் மேல் ஆள் அனுப்புகிறார்கள்' - கடம்பூர் ராஜு பகீர்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
nn

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பிற்காக அனைத்து கட்சிகளும் காத்திருக்கும் சூழ்நிலையில் திமுக தொகுதிப் பங்கீட்டிற்கான இறுதி பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தற்போது வரை கூட்டணிக்கான கதவுகளை திறந்தே வைத்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னரே கூட்டணி பிளவு கண்டிருந்த அதிமுக, பாஜக கட்சிகள் ஒன்றை ஒன்று விமர்சிக்காமல் இருந்த நிலையில், தற்போது மாறி மாறி விமர்சனங்களை வைத்து வருகின்றன. இதற்கிடையே தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார்.

முன்னரே கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த எடப்பாடி பழனிசாமி, இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை. மீண்டும் மீண்டும் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்ப வேண்டாம் என  கட் அன்ட் ரைட்டாக பேசியிருந்தார். எடப்பாடியின் இந்த பேச்சுக்கு பிறகு அரசியல் வட்டாரத்தில் அதிமுக, பாஜக வார்த்தை மோதல்கள் அதிகரித்தது. லேகியம் விற்பனை, வாய்க்கொழுப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு ஆகியோர் விமர்சனங்களை பாஜகவை நோக்கி வைத்தனர். ஆனால் மாற்றாக நேற்று முன்தினம் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அதிமுகவின் தலைவர்களான ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரைப் புகழ்ந்து பேசியது மீண்டும் பாஜக, அதிமுக கூட்டணிக்கு அடித்தளமிடும் செயல் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

admk

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஒரு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், 'இந்த நிமிடம் வரை பாஜக எங்களுடன் கூட்டணி வைக்க தவம் இருக்கிறது. பாஜக வலுவாக இருந்தால் அதிமுகவிற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? பாஜகவின் வாக்கு விகிதம் அதிகரித்திருப்பதாக வரும் கணிப்புகள் எதுவும் உண்மை இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவை சேர்க்க பாஜகவினர் ஆள் மேல் ஆள் அனுப்புகிறார்கள். அதிமுக பலமாக இருப்பதால் பாஜக எங்களுக்காக காத்திருக்கிறது. இல்லையெனில் ஏன் காத்திருக்க வேண்டும்?' என்ற கேள்வியை வைத்துள்ளார் கடம்பூர் ராஜூ.

Next Story

“விஜய்யை கண்டு திமுக அஞ்சுகிறது” - கடம்பூர் ராஜு

Published on 15/10/2023 | Edited on 15/10/2023

 

"DMK fears Vijay" - Kadampur Raju

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் உள்ள சமுதாய கூடத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு துவக்கி வைத்தார். 

 

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “விஜய்யை பார்த்து திமுக அஞ்சுகிறது. சினிமாவில் எந்த நடிகர்களாக இருந்தாலும் ஏற்றத்தாழ்வுகளை அரசு பார்க்கக் கூடாது. கடந்த அதிமுக ஆட்சியில் முன்னணி நடிகர்களின் படம் வரும்போது எந்த பாரபட்சமும் பார்க்காமல் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கொடுத்திருந்தோம்.

 

ஆனால், தற்போது குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது சரியல்ல. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் திரைப்படங்கள் பாரபட்சமில்லாமல் திரையிடப்பட்டது. ஆனால் தற்போது 200க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படாத சூழ்நிலையில் தான் உள்ளது” என்று தெரிவித்தார்.