Skip to main content

"பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை அது"- அமைச்சர் கடம்பூர் ராஜூ 

Published on 27/04/2020 | Edited on 27/04/2020
kadambur raju

 

ஜே.ஜே. பெட்ரிக் இயக்கத்தில், ஜோதிகா நடித்து, சூர்யா தயாரித்துள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. இந்த படம் ஏப்ரல் மாத தொடக்கத்தில் வெளியாவதாக இருந்தது. கரோனா தோற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் மே மாதம் ஓடிடி பிளாட்பார்மில் ரிலீசாக இருக்கிறது.

இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளருக்கு இடையே பெரும் பிரச்னை போய்க்கொண்டிருக்கிறது. மேலும், சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பு படங்கள்  இனி வெளியாகாது என்று தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் இது பற்றி கேட்டபொழுது "பாதிக்கப்படுகின்றவர்கள், அதாவது தியேட்டர் உரிமையாளர்கள் அவர்கள் கருத்தினை கூறுகின்றனர். தயாரிப்பாளர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் பிரச்சினை தொடர்பாக இரு தரப்பையும் போனில் அழைத்து பேசினேன். இது இருதரப்பும் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினை என்பதால் அரசு அதற்கு உதவி செய்யும். இந்த விஷயத்தில் முதல்வரின் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
 

சார்ந்த செய்திகள்